சென்னை, ஜன. 29- மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி ஞாயிறன்று தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பில் மதவெறி எதிர்ப்பு கருத்தரங்கம் நடை பெறுகிறது. காணொளி வழி யாக காலை 11மணிக்கு துவங் கும் கருத்தரங்கிற்கு அமைப்பின் மாநில பொறுப்புத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலை மை தாங்குகிறார். மதிப்புறு தலைவர் ச.தமிழ்ச் செல்வன் துவக்கவுரையாற்றுகிறார். “விருட்சங்களை அழிக்கலாம், விதைகளை அழிக்க முடியாது” என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்துரையாற் றுகிறார். அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா நிகழ்வை ஒருங்கிணைக் கிறார். இந்நிகழ்வை காண ஜூம் செயலியில் மீட்டிங் ஐடி 83794517049 பாஸ்கோடு TMEKS வழியாக இணைய லாம்.