திருப்பூர், பிப்.15- கத்துக்குட்டி அண்ணாமலைக்கு கம்யூ னிஸ்ட் கட்சியின் விடுதலைப் போராட்ட பாரம்பரியம், வரலாறு தெரியாது. எனவே கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிக்கதற்கு அவ ருக்கு அருகதை இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் தியாகி பழனிசாமி நிலையத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு கே. பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் கூறிய தாவது: அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி என்ன தெரியும்? கம்யூ னிஸ்ட்டுகள் பாரம்பரியம் பற்றி என்ன தெரி யும்?. இந்த நாட்டின் வரலாறு தெரிந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் விடுதலைப் போராட்டத்தில் எவ்வளவு பெரிய தியாகத்தை செய்து, மகத்தான போராட்டம் நடத்தி இந்த நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரி யும். ஆனால் விடுதலை போராட்டத்தில் பங்கெ டுக்காதது மட்டுமின்றி, அதைக் காட்டிக் கொடுத்த கூட்டத்தின் பிரதிநிதியாக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை.
குஜராத் ஏபிஜி கம்பெனியை விசாரிக்க தாமதம் ஏன்?
ஊழலிலும் பாஜக பெரிய இமாலய சாதனை புரிந்திருக்கிறது. குஜராத்தில் ஏபிஜி என்ற தனியார் கப்பல் கட்டும் நிறு வனம் ரூ.22 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு அரசு வங்கி பணத்தை வாங்கிக் கொண்டு மொத்தமாக ஏமாற்றி இருக்கிறது. குஜ ராத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்துக்கு மோடி யின் தொடர்பு இல்லாமலா ரூ.22 ஆயிரம் கோடி கடன் கொடுப்பார்கள்? 2013இல் போட்ட வழக்கை சிபிஐ இன்னும் விசாரித்துக் கொண்டி ருக்கிறது, ஏன் இந்த தாமதம்? தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் தேசிய குழந்தைகள் ஆணையம் அவசர அவசரமாக வருகிறது, அவ சரமாக சிபிஐ விசாரணைக்கு அறிவிக்கின்ற னர். ஆனால் ஏபிஜி நிறுவன சிபிஐ வழக்கை 9 வருடமாக கிடப்பில் போட்டிருப்பது ஏன்? இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்?இவ்வாறு கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.