விருதுநகர், அக்.25- கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் வந்து செல்லும் அங்கன்வாடி மையங்களுக்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தர விட்டுள்ளதை கண்டித்து ஊழியர்கள் ஆவேச முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. துவக்கம் முதலே இந்த உத்தரவை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சிஐடியு) எதிர்த்து வந்தது. தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத ஒரு திட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செய்து வருவதாக சிஐடியு சங்கம் விமர்சித்துள்ளது. கண்காணிப்பு கேமராக்களை அகற்ற வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 13 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. பின்பு, நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெறாது என, மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் திட்ட அலுவலர் எழுத்துப்பூர்வ மான உறுதிமொழியை சங்க நிர்வாகி களிடம் வழங்கினார். ஆனால், அந்த உறுதிமொழியை யும் மீறி மாவட்ட ஆட்சியர், சில அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை துவங்க உத்தர விட்டுள்ளார். இதனையடுத்து, அக்டோபர் 20 அன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத் தின் முடிவில் அரசு சார்பில் வழங்கப் பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்களை அங்கன்வாடி ஊழி யர்கள் திட்ட அலுவலரின் அலு வலகத்தில் திருப்பி ஒப்படைத்தனர். இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று காலை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 1220 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்தர் ராணி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட நிர்வாகிகள் எம்.சாராள், ஆர்.பாலசுப்பிரமணியன், பி.ராமர், எம்.திருமலை ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். (ந.நி.)