சென்னை, மார்ச் 4 - காவல் புகார் ஆணைய விதிகளில் திருத்தம் செய்வது குறித்து விளக்கம ளிக்குமாற தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை சித்ரவதை, காவல்நிலைய மரணங்கள் (லாக்அப்) போன்ற குறித்து புகார்கள் தர அனைத்து மாநிலங்களிலும் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல்துறை சீர்த்திருத்த சட்டம்’ கொண்டு வரப்பட்டு, மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணை யங்கள் அமைக்கப்பட்டன. மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் காவல்துறை தலைமை இயக் ்குநர் (டிஜிபி), காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்கா ணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்க ப்பட்டனர்.
இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங் களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணா மூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தி ருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் வியாழ னன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண் ணனிடம், சுதந்திரமான நபரை ஏன் புகார் ஆணையத்தில் நியமிக்கவில்லை, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக புகார் குழு அமைக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். அனைத்து மாநிலங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவல் புகார் ஆணையங்களை அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், காவல் துறையி னருக்கு எதிரான புகார்களை, அவர்களே எப்படி விசாரிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். இதுசம்பந்தமான விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து, அதுகுறித்து விளக்கமளிக்க அரசுத்தரப்பில் ஒரு வார காலம் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஒரு வாரத்தில் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்தி வைத்தனர்.