tamilnadu

img

சிங்காநல்லூர் ரயில் நிலையம் முற்றுகை

கோவை ஜூன் 26 –  சிங்காநல்லூர் ரயில் நிலை யத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி ஞாயிறன்று அனைத்து கட்சி களின் சார்பில் ரயில்நிலைய முற்று கை போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.  கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையம் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. நகரத்தின் முக்கிய தொழில் கேந்திரமான இடத்தில் உள்ள இந்த ரயில் நிலையம் உள் ளது. தொழில்நகரான கோவைக்கு  மேற்கு மண்டல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தின சரி வந்து செல்கின்றனர். இதே போன்று சிங்காநல்லூரில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலை நிமித்த மாக சென்று வருகின்றனர். தற்போது  சிங்காநல்லூர், இருகூர் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் ரயில்கள் நிற்பதில்லை. இதனால் ரயில்பய ணிகள் பெரும் அவதியடைந்து வரு கின்றனர். கோவை ரயில்நிலை யத்தில் மட்டும் ரயில்கள் நிற்பதால் ஒட்டுமொத்த கூட்டமும் அங்கு இறங்குகிறது.  இதனால் நகரத்தின் மையப்பகுதி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. 

பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகள் இறங்கியபோது கோவை ரயில் நிலையத்தில் நெரிசலற்ற நிலை இருந்தது. மேலும், கோவை ரயில் நிலையத்தில் இறங்கியவர் கள் சிங்காநல்லூர், பீளமேடு, ஒண்டி புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் திரும்பசெல்வதால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதோடு, பயணிகளுக்கும் காலவிரயம், அலைச்சல் என பெரும் அவதி ஏற்படுகிறது.  கொரோனா தொற்றுக்கு முன்பு பெரும்பாலான ரயில்கள் சிங்காநல் லூர் ரயில்நிலையத்தில் நின்று சென்றது. தற்போது இயல்புநிலை க்கு திரும்பியும் கூட சிங்காநல்லூர் ரயில்நிலையத்தில் நிற்பது இல்லை என தொடர்ந்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், தென்னக  இரயில்வே, சேலம் கோட்ட ரயில்வே உள்ளிட்ட அதிகாரிகளிடம் கவ னத்திற்கு கொண்டு சென்றார். மேலும் நினைவூட்டல் கடிதங்களை யும் அனுப்பினர். இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இதனையடுத்து பயணிகளின் நிலையை புரிந்து கொள்ளாத ரயில்வே நிரவாகத்தை கண்டித்து,  அனைத்து ரயில்களும் வழக்கம் போல சிங்காநல்லூர் ரயில்நிலை யத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை கவனப்படுத்தும் விதமாக  சிங்காநல்லூர் ரயில்நிலையத்தை முற்றுகையிடுவது என அனைத்து கட்சியின் சார்பில் முடிவெடுக்கப் பட்டது. 

இதன்தொடர்ச்சியாக ஞாயி றன்று ரயில் நிலையத்தை முற்று கையிடும் போராட்டம் நடைபெற் றது. திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் முன்னிலை வகித்தார். இதில்,  காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், மதிமுக மாநகர்  மாவட்ட செயலாளர் ஆர்.ஆர் மோகன் குமார், விசிக மாவட்ட செய லாளர் ஜோ.இலக்கியன், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், கொ.ம.தே.க கிழக்கு மாவட்ட செயலாளர் பி.தனபால், சிபிஎம் சிங்கை நகர செயலாளர் வி. தெய்வேந்திரன், ரயில்வே ஆலோ சனைக்குழு உறுப்பினர் யு.கே.சிவ ஞானம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.  முன்னதாக, பி.ஆர் நடராஜன்  எம்.பி., பேசுகையில், கொரோனா வை காரணம் காட்டி சிறப்பு ரயில் என்ற பெயரில் அனைத்து ரயில்களையும், அனைத்து ரயில் நிலையங்களிலும் நிற்காமல் செல்வ தால் அன்றாட வேலைக்கு செல்லும் பாமர மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். ஆகவே, கோவை - நாகர் கோவில் - கோவை, பாலக்காடு - திருச்சி - பாலக்காடு,ரயில் எண் 16322/16321 மற்றும் 16844/16843 ஆகிய ரயில்களை முறையாக இரு கூர் மற்றும் சிங்கநல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முன்பு போலவே நின்று செல்ல வேண்டும்.  ஏற்கனவே இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி யிருந்தேன். ஆனாலும் இந்த போக்கு தொடர்கிறது. எனவே, உரிய அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காணவேண்டும். இல்லையெனில் அடுத்து ரயில்மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.