tamilnadu

img

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விருதுநகரில் அனைத்து சங்கத்தினர் போராட்டம்

விருதுநகர், ஏப்.27- இந்திய மல்யுத்த கூட்ட மைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங். இவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர்  மல்யுத்த வீராங்கனை களுக்கு  தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்  துள்ளார். எனவே, அவர் மீது  உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி, தலைநகர் தில்லியில் மல்யுத்த வீராங்க னைகள் போராடி வருகின்ற னர். ஆனால், பாஜக அரசு, இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தில்லி யில் போராடி வரும் வீராங்க ளைகளுக்கு ஆதரவாக வும், பாஜக எம்.பி மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து சங்கங்கள் சார்  பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செய லாளர் எஸ்.லட்சுமி தலைமை யேற்றார். துவக்கி வைத்து விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சுந்தரபாண்டியன் பேசி னார். முடிவில் விவசாயி கள் சங்க மாவட்ட செயலா ளர் வி.முருகன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி. வேலுச்சாமி, இந்திய மாண வர் சங்க மாவட்ட செயலா ளர் கிஷோர், வாலிபர் சங்க  மாவட்ட நிர்வாகி பாண்டீஸ் வரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.