tamilnadu

img

ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது

ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 10 சட்டத் திருத்த மசோதாக்கள் சட்ட மானது என்று அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில்  நிறைவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதில், ஆளுநர்  அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-இன்கீழ் செயல்பட வேண்டும் எனவும், மசோதாக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும், மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளு நருக்கு கிடையாது எனவும் கிடப்பில் போடப்பட்டிருந்த 10 மசோ தாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்பு தல் அளித்து, ஏப்ரல் 8 ஆம் தேதி  உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத் திற்கு நன்றி தெரிவித்தார். மேலும்,  ஆளுநருக்கு எதிரான உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பெரிதும் வரவேற்பு  கிடைத்தது. இந்நிலையில், உச்ச  நீதிமன்ற தீர்ப்பின் நகலை தமிழ்நாடு  அரசு அரசிதழில் சனிக்கிழமை (ஏப்.12) வெளியிட்டுள்ளது. அதில், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாவது திருத்தச்)  சட்ட முன்வடிவு (சட்டமன்றப் பேரவை  சட்ட முன்வடிவு எண்.48/2022) 19  அக்டோபர் 2022 அன்று தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவையில் நிறை வேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக் காக சமர்ப்பிக்கப்பட்டது என்பதா லும், கூறப்பட்ட சட்டமுன்வடி விற்கு 13 நவம்பர் 2023 அன்று  ஆளுநர் இசைவளிக்க மறுத்தார் என்பதாலும், தமிழ்நாடு முதல மைச்சரால் 18.11.2023 அன்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் முன்மொ ழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  அதன் அடிப்படையில் கூறப் பட்ட சட்டமுன்வடிவு மறுபரிசீ லனை செய்யப்பட்டு, எந்தவித மாறுதலுமின்றி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. பின்னர், சட்டப்பேரவை சட்ட முன்வடிவு எண்.48/2022, 18.11.2023  அன்று ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் அந்த  சட்ட முன்வடிவை 28.11.2023  அன்று குடியரசுத் தலைவரின் பரி சீலனைக்காக அனுப்பியிருந்தார். உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மனு  (உரிமையியல்) எண்.1239/2023 ஏப்ரல் 8 ஆம் தேதி, அதன் ஆணை யில், மேற்கூறிய சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு பரிசீல னைக்கு அனுப்பிய பின்னர், குடி யரசுத் தலைவர் எடுத்திருக்கக் கூடிய அனைத்து விளைவுறு நடவ டிக்கைகள் சட்டத்தின்படி இல்லா நிலையது என்றும், மேற்கூறிய சட்ட  முன்வடிவு மறு பரிசீலனை செய்யப் பட்டு ஒப்புதலுக்காக ஆளு நருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட நாளில் அவரால் ஒப்புதல் அளிக் கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்று ஆணையிட்டது. எனவே, ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய ஆணையின் அடிப்படையில் கூறப்பட்ட சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண்.48/2022 ஆனது, தமிழ்நாடு ஆளுநரால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல்  அளிக்கப்பட்டதாக கருதப்படுதல்  வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.