உணவு உற்பத்தி: 126 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு
விவசாயிகள் எதிர்கொள் ளும் பல்வேறு வேளாண் தொடர்பான பிரச்சனைக ளுக்கு உரிய தீர்வுகள் காண்பதற்காக, தலைமைச் செயலர் தலைமையில், உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக விவ சாயப் பெருமக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் துறைவாரியாக தொகுக் கப்பட்டு வருகின்றன. 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பாதி ப்புகளுக்கு உள்ளாகும் என்று ஆறாவது கால நிலை அறிக்கையில் கூறப் பட்டுள்ளதால், வேளாண் மையில் அதன் பாதிப்பு களைக் குறைப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள் வது அவசியமாகிறது. காலநிலை மாற்றங்க ளைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களுக்கு முக்கியத்து வம் அளிப்பதற்காக மாற்று ப்பயிர் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதன் கீழ், அதிக நீர்த் தேவை கொண்ட பயிர்க ளுக்கு மாற்றாக சிறுதானி யங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் சாகுபடியை விவசாயி களிடையே பரவலாக்கம் செய்திட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். மானா வாரி நிலங்களில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்து வதற்கான திட்டங்களான நீர்சேகரிப்புக் கட்டமைப்பு கள், நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கடந்த ஆண்டு வடகிழக் குப் பருவமழையால் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்து 35 ஆயிரம் வேளாண் பெருமக்கள் மீண்டும் விவசாயம் செய்ய இடுபொருள் மானிய மாக 154 கோடியே 69 லட்சம் ரூபாய் நிவாரண நிதி விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. 17 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி ஆகிய உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப் பட்டது.
முக்கிய நோக்கங்கள்
திட்டத்தின் ஒன்றான தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது. அனைத்து வேளாண் சார்ந்த துறைத்திட்டங்களை ஒருங்கிணைத்து. ஒட்டுமொத்த கிராம வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பது. மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது. மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது. இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பி லிருந்து விவசாயிகளை பாதுகாத்தல் ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட, விவசாயிக ளுக்கு வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குதல் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல் வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விரைவான சேவை அளித்தல். பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துதல். வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மரபுசார் இரகங்களை ஊக்குவித்தல். வேளாண்மை பணிகளை இயந்திரமயமாக்குதல். சூரிய சக்தியினை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தல் பண்ணைக்குட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நீராதாரங்களை வலுப்படுத்தல். சந்தை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க உதவுதல்.
நெல் சாகுபடியில் சாதனை!
குறுவை சாகுபடிக்கென மேட்டூர் அணையைத் குறித்த நாளில் திறக்கப் பட்டு ரூ. 61 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் சாகுபடித் தொகுப்பும் வழங்கப்பட்டது. இதனால், 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப் பட்டு 3 லட்சத்து 16 ஆயிரம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதார மும் உயர்ந்திட வழிவகுக்கப்பட்டது. இது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வர லாற்று சாதனையாகும். 2021 ஆம் ஆண்டில் நமது மாநிலத்தில் பெய்த பருவமழையினை திறம்பட பயன்படுத்தும் வகையில், வாய்க்கால்களை தூர் வாருதல், இடுபொருள் விநியோகம், வேளாண் விரிவாக்க சேவைகளை இந்த அரசு முடுக்கிவிடப்பட்டது. இதனால், 2021-22 ஆம் ஆண்டில் 14.3.2022 வரை, தமிழ கத்தின் நெல் சாகுபடிப் பரப்பு 53 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டினைக் காட்டிலும், 4 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கர் கூடுதலாகும்.
86 அறிவிப்புகளில் 80 நிறைவேற்றம்
சென்ற ஆண்டு வாசிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை தவழ்கிற மழலையாய் காதுகளில் ஒலித்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை நடக்கிற குழந்தையாய் நம்மைக் குளிர்விக்கவிருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் அது ஓடுகிற குழந்தையாய் உயரவிருக்கிறது என்பதை வாசிக்கிற விதத்தில் மட்டும் அல்ல, வழிநடத்து கிற விதத்திலும் நீங்கள் அறிந்துகொள்ள இருக்கிறீர் கள். கடந்த நிதி நிலை அறிக் கையை வாசித்துச் செயல்படுத்த ஆறு மாதங்களே அவகாசம் இருந்தது. இடையில் பெரும ழையும், பெருந்தொற்றும் மாநிலத்தை பெரிதும் பாதித்தன. இருப்பினும், முதல் நிதிநிலை அறிக்கை யில் அறிவிக்கப்பட்ட 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள ஆறு அறிவிப்புகளும் நீண்ட நாள் திட்டம் என்பதனால் உட்கூறுகளை வகைப் படுத்தி திட்ட மதிப்புடன் செயல்படுத்துவதற்கு வழி காட்டு நெறிமுறைகள் வெளி யிடப்படும். கடந்த ஆண்டு விதைக்க ப்பட்ட திட்டங்கள் வேரூன்றி யுள்ள நிலையில் இவ்வாண் டும் அவை தழைத்து வளர்வ தற்கான அனைத்து செயல் பாடுகளும் மேற்கொள்ளப் பட்டு உள்ளன. மேலும், இவ்வாண்டு அடுத்த பரிமாண நகர்வுக்குத் தேவை யான திட்டங்களும் அறிமு கப்படுத்தப்படுகின்றன.
இலவசமாக தென்னங்கன்றுகள்'
வேளாண்துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்கள், செயல்படுத்தும் திட்டங்கள், அமைக்கப் படும் கட்டமைப்புகள், தொழில்நுட்பம் அனைத்தையும் ஒருங்கிணைத்து உழவர்களை கைப்பிடித்து முன்னேற் றத்திற்கு அழைத்துச் செல்கிற முயற்சியை ஊரக வளர்ச்சித் துறையும், வேளாண் துறையும் இணைந்து மேற்கொள்ளும். எண்ணற்ற உலர் களங்களும், கான்கிரீட் களங்க ளும், நெல் கிடங்குகளும், பண்ணைக் குட்டைகளும், கசிவுநீர்க் குட்டைகளும், சிறுஏரிகள் பாசன மேம்பாடும் சேரும்போது ஏற்படும் தாக்கம் மகத்தானதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதோடு எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு ஊரகப்பகுதிகளில் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. வரும் 2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டம், 3204 கிராமப் பஞ்சாயத்துக்களில் 300 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ. 132 கோடியில் 7 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் 3 ஆயிரம் மானாவாரி நிலத் தொகுப்புகள் உருவாக் கப்படும். இதன் மூலம் மூன்று லட்சம் மானாவாரி விவசாயி களின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர்ந்திடும்.
சிறந்த விவசாயிகளுக்கு பரிசு
2022-23-ம் நிதியாண்டில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தன மரம், மகா கனி, தேக்கு போன்ற மதிப்பு மிக்க மரக்கன்று கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும். மேலும், இயற்கை வேளாண்மை பொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டு பிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசுகள் அளித்தும் பாராட்டியும் மகிழும். சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள், தொழில்முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் சிறு தானிய திருவிழா மாவட்ட அளவில் நடத்தப்படும்.
பாரம்பரிய நெல் வகைகள்
வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்க ளுக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படு கிறது. மானியத்தில் வேளாண் கருவி வழங்க ரூ. 15 கோடியும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதியும் ஒதுக்கப்படுகிறது. பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப் பட்டுள்ளன. காடுகள் மழையை ஈர்க்கும் இயற்கை காந்தங்கள். பூமியை குளிர்விக்கும் மரதக குட்டைகள். சாகுபடிகள் தமிழ்நாட்டில் வேளாண் காடுகளை உருவாக்கி வன பரப்பை அதிகரிக்க வேண்டியது அவசிய மாகும்.
நிலையான பருத்தி இயக்கம்
நீடித்த நிலையான வருமா னத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணை யம் சாகுபடியுடன், கறவை மாடு, ஆடுகள், நாட்டுக்கோழிகள், தீவனப் பயிர்கள், மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து தோட்டம் ஆகிய வேளாண் தொடர்பான பணிகளை யும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங் கிணைந்த பண்ணைய தொகுப்புகள் 65 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். நீடித்த நிலையான பருத்தி இயக்கம் ரூ. 15 கோடியே 32 லட்சம் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் இயற்கை முறை பருத்தி சாகுபடியும் ஊக்குவிக்கப்படும்.
பனை மேம்பாட்டு திட்டங்கள்
தமிழகத்தில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். எனவே, கடந்த ஆண்டை போன்று இந்த முறையும் 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 விழுக்காடு மானியத்தில் வழங்கப் படும். சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்க ளுக்கு விருதும் வழங்கப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும். 5 மாவட்டங்களில் அச்சு வெள்ளம் தயாரிக்கப்படும்.
சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்!
திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலம். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு இரண்டாவது மண்டலம். துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைக் கொண்டது) சிறு தானியங்களின் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சிறு தானிய திருவிழாக்கள். சிறுதானி யங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு விதை முதல் விற்பனைக்கு ரூ.152 கோடியில் உதவி வழங்கப்படும்.
புதிதாக உழவர் சந்தைகள்
50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ. 15 கோடி மற்றும் 10 உழவர் சந்தை களை அமைக்க ரூ.10 கோடி. உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி. தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க - ரூ.30 கோடி. தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங் ங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதி. மாநில அளவிலான “உழவர் உற்பத்தியாளர் நிறுவனங் கள் மேலாண்மை மையம்” அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு வழி காட்டுதல். சூரியகாந்தி உற்பத்தி சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை அதி கரித்து தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் அறிவித்ததைச் செயல் படுத்திட சூரியகாந்திப் பயிரின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறன் ஆகியவை உயர்த்தப்படும்.
வேளாண் வளர்ச்சிக்கு ரூ.300 கோடி, கரும்பு சாகுபடிக்கு ரூ.10 கோடி
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு. முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி. ரூ.71 கோடியில் புதிய திட்டம் அறிமுகம் இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம். மொத்த காய்கறி விற்பனை வளாகம்!
பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் “மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழக விவசாயி களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதி. காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள் - ரூ.65.34 கோடி மற்றும் 145 சூரியசக்தி உலர்த்திகள் ரூ.3 கோடி. ஆறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 36 கோடி. பெரம்பலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.125.44 கோடி 60 ட்ரோன்களை வாங்குவதற்கும் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்கு ரூ 10.32 கோடி வேளாண் சார்ந்த துறைகளின் செயல்பாடுகள். காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி. அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள் நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி. சோயாபீன்ஸ் ஊக்குவிப்பு சூரியகாந்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை ரூ.29.7 கோடிக்கு ஊக்குவித்தல்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157.56 கோடி. ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள். விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் மூன்று இலட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் சிறிய விவசா யம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிட்கோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை, வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.
மண் பரிசோதனை மையம் மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம். உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி. பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் தானியங்கி எடைகள் – ரூ.4.5 கோடி மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி ஒதுக்கீடு பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,546 கோடி நிதி ஒதுக்கீடு. அனைத்து கிராம நிலங்களுக்கும் புவியிடக்குறியீடு, புதிய பயிர்த் திட்டத்திற்கான பரிந்துரை. பூச்சி மற்றும் நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி, நவீன இணையதளம் நீர்ப்பாசனத்தில் தானியங்குமயமாக்கலுக்கு நவீன இணையதள தொழில்நுட்பம். மண் வள அட்டைகளுக்கான தமிழ் மண் வளம் இணையமுகப்பு, பயிர் சாகுபடிப் பரப்பினை கணிக்க தொலை உணர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், இடுபொருட்கள், விதைகள் மற்றும் கன்றுகளை ஆன்லைனில் பதிவு செய்து விநியோகம், வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை. சீர்மிகு நெல் சாகுபடி சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் 19 லட்சம் எக்டரில் சாகுபடி மேற்கொண்டு, உயர் விளைச்சல் பெற, ஒன்றிய, மாநிலத் திட்டங்கள் மூலம் மொத்தம் ரூ. 32 கோடியே 48 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.