வாஷிங்டன், மார்ச் 12- உயிரியல் ஆயுதங்களை பரிசோதனை செய்யும் கூடங்கள் உக்ரைனில் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்காவின் அரசி யல் விவகாரத்துறை செயலாளர்களில் ஒருவ ரான விக்டோரியா நுலாண்ட் ஒப்புக் கொண் டுள்ளார். உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் இருப்ப தாக ரஷ்யாவும், சீனாவும் குற்றம் சாட்டி யிருந்தன. இந்த விவகாரத்தை ஐக்கிய நாடு கள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற வேண்டு கோள் முன்வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.சபைக்கான ரஷ்யப் பிரதிநிதி டிமிட்ரி போலி யான்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவத்துறை சார்பாக பல ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அத்த கைய உயிரியல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் உடனடியாக அழித்தொழிக்கப்பட வேண்டும்.
இது உலகம் முழுவதும் உயிரி யல் ஆயுதங்களைத் தயாரிக்கும் அமெரிக் கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைந்தி ருக்கிறது என்று போலியான்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள விருக்கிறது. சீனா அதற்கும் ஒரு படி மேலே போயி ருக்கிறது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ஜாவோ லிஜியான் பேசு கையில், “பரிசோதனைக் கூடங்கள் எப்படி இயங்கும் என்பது அமெரிக்காவுக்கு நன்றா கவே தெரியும். அங்கு சேமித்து வைக்கப் பட்டுள்ள வைரஸ்கள் மற்றும் அதன் மீதான ஆய்வுகள் பற்றிய விபரங்களை எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவில் வெளியிட வேண்டும். உலகம் முழுவதும் 30 நாடுகளில் 336 அபாயமான ஆய்வுக்கூடங்களை அமெரிக்கா வைத்தி ருக்கிறது” என்று குறிப்பிட்டார். உயிரியல் ஆயுத பரிசோதனைக் கூடங் கள் குறித்த குற்றச்சாட்டுகளை “நகைப்புக் குரியது” என்று அமெரிக்கா குறிப்பிட்டது. ஆனால், அடுத்த நாளே உண்மை அம்பலமா கியது. அமெரிக்க செனட் அவையின் சர்வ தேச உறவுகள் குழுக்கூட்டத்தில், அரசியல் விவகாரத்துறை செயலாளர்களில் ஒருவரான விக்டோரியா நுலாண்ட், உக்ரைனில் உயிரி யல் ஆயுதப் பரிசோதனைக் கூடங்கள் இருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் பரிசோதனைக் கூடங்கள் பற்றி விவாதிக்க ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் தனிக்கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
தடை செய்ய வேண்டும்: இந்தியா
இந்நிலையில் உக்ரைனில் ரசாயன ஆயு தங்கள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப் படுவதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. தொடர் பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியா வின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், உயிரியல், ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்துக்கு கீழ்படியு மாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்தது. “உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களை முழுமையாக தடை செய்யப்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். உக்ரை னில் நிலவும் மனிதாபிமான நிலை குறித்து இந்தியா கவலை அடைந்திருக்கிறது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக் கும் இடையே நடந்து வரும் நேரடி பேச்சுவார்த்தை போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். போர் நிறுத்தத்துக்கு பேச்சு வார்த்தை தவிர வேறு வழி யில்லை. ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத் தின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்” என்று திருமூர்த்தி கூறினார்.