அமெரிக்காவில் வேளாண் அமைச்சர் ஆலோசனை
வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று, உலக அரங்கில் தமிழ்நாடு விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். விஸ்கான்சின் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஜூன் 23 ஆம் தேதி நடந்த கலந்துரையாடலில், திடீரென பரவும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பான பூச்சி மேலாண்மை குறித்து விவாதித்துள்ளார். விஸ்கான்சின் மாகாணத்தில் அதிக மகசூல் தரும் கேரட் விதைகளை தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கான்சாஸ் மாநில வேளாண் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் நவீன முறைகள், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார்.