சென்னை,அக்.22- குழந்தையின் தொப்புள் கொடி யை வெட்டி வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பானை மன்னிக்க முடி யாது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபரான இர்பான் - ஆசிபா தம்ப திக்கு கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடி யை கத்திரிக் கோலால் வெட் டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந் திருந்தார். இந்த செயலுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரையில் செவ்வாயன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “குழந்தை யின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது. இந்தமுறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும், விட மாட்டோம். அவர் மன்னிப்புக் கேட்டா லும், அதை ஏற்க முடியாது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. மருத்துவர் நிவேதிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பயிற்சியை தொடர தடை விதிக்க மருத்துவ கவுன்சில் சார்பில் பரிந்து ரைக்கப்படும். தவறு செய்தவர் களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்” என்று தெரிவித்தார்.