tamilnadu

img

ஒருவார கால பிரச்சார இயக்கம்

நாளை தொடங்குகிறது

சென்னை, மே 23- ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை கண் டித்து நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது.  அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரமும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற உள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், விசிக தலை வர் தொல்.திருமாவளவன் எம்.பி.,  சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநி லக்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர்  சென்னையில் திங்கட் கிழமை (மே23) செய்தியாளர்களி டம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி யும் நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் வரும் மே25 முதல் 31  வரை வீடு வீடாகச் சென்று மக்களை  சந்தித்து துண்டுப் பிரசுரம் விநியோ கிக்கவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்த வும் அறைகூவல் விடுத்துள்ளன. அதையொட்டி தமிழகத்தில் இடது சாரிக் கட்சிகளோடு விசிகவும் இணைந்து இந்த இயக்கத்தை மேற் கொள்வது என தீர்மானித்துள்ளோம். 

கொந்தளிப்பை அடக்கவே  விலை குறைப்பு 

 மோடி அரசு கடைப்பிடிக்கும் தவ றான பொருளாதாரக் கொள்கைகள் நாட்டில் மோசமான விளைவுகளை உருவாக்கி வருகின்றன. அரு கில் உள்ள இலங்கையில் ஏற் பட்டுள்ள கொந்தளிப்பு போல், இந்தி யாவிலும் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்படும் என்ற அச்சத்தினால் சிறித ளவு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை உயர்த்தியுள்ள விலையில் இருந்து  6 அல்லது 7 விழுக்காடு அளவுக்கு  விலையை குறைப்பது ஒரு முழு மையான நிவாரணமாக இருக்காது. எனவே ஒன்றிய அரசு விதித்துள்ள செஸ் வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கேஸ் விலையையும் குறைத்திடுக!

அதேபோல் இலவச சமையல் எரிவாயு உருளை (உஜ்வாலா)  திட்டத் தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியவர்களுக்கு மட்டும் 200 ரூபாய் விலை குறைக்கப்பட்டிருக் கிறது. இதுபோதாது. சமையல் எரி வாயு மீது உயர்த்தப்பட்ட விலை உயர் வையும் ஒன்றிய அரசு உடனே திரும் பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் அவ திப்படுகிறார்கள். சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வு  நாளுக்குநாள் நொறுங்கிக் கொண்டிருக் கிறது. எனவே விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை யை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு கோரிக்கை 

வடமாநிலங்களில் கோதுமை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நியாய விலைக்கடைகளில் கோதுமை வழங்கப்படுவதில்லை. ஏனென்றால் அரசு கொள்முதல் செய்யவில்லை. தமி ழக அரசு நெல் கொள்முதல் செய்ய வில்லை என்றால் நாளை இங்கும் நியாய விலைக் கடைகளில் அரிசி கிடைக்காது. விலைவாசி உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள மக்களை பாதுகாக்க அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நியாய விலைக்கடைகளில்  நியாயமான விலையில் வழங்க வேண்டும்.

வாக்குறுதியை மறந்த மோடி அரசு 

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உரு வெடுத்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்றார்கள். ஆனால் 7 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இத னால் இன்று இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பொதுத் துறை, அரசு நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் நியமனம் செய்தால் கூட, அவர் களை பணி நிரந்தரம் செய்வதில்லை என்ற கொள்கை முடிவை ஒன்றிய அரசு  எடுத்துள்ளது. அனைவரும் தொகுப்பூதி யம், மதிப்பூதியத்தில் பணியமர்த்தப்படு கிறார்கள்.

அம்பானி, அதானி  சுரண்டலுக்கு அனுமதி 

ஒன்றிய அரசின் தவறான கொள்கை யால் பஞ்சு விலை கடுமையாக உயர்ந்துள் ளது. கடந்த பல வருடங்களாக எவ்வளவு  பஞ்சு உற்பத்தியானதோ அதே அளவு தான் இந்தாண்டும் பஞ்சு உற்பத்தியாகி யுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பஞ்சு விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கெண்டி பருத்தி 35  ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போதைய விலை 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய். காரணம் ஒன்றிய அரசு உற்பத்தியான பருத்தியை கொள்முதல் செய்யவில்லை. மாறாக அம்பானி, அதானி போன்ற பெரும் நிறுவனங்கள் பருத்தி முழுவதையும் கொள்முதல் செய்து, 3 மடங்கு, 4 மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.  தொழிலே நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர் இயக்கங்கள் 

கார்ப்பரேட் நிறுவனங்களை பாது காக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரி டம் வழங்குவது, எல்.ஐ.சியை அடிமாட்டு  விலைக்கு விற்பனை செய்ய முயற்சிப் பது, பொதுத்துறை நிறுவன சொத்துக் களை விற்பனை செய்வது போன்ற நட வடிக்கைகளால் இந்திய நாடு மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகும், மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்படும். எனவே தான் மோடி அரசின் தவறான பொருளா தார கொள்கைகளை தமிழக மக்களிடம் அம்பலப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 25 முதல் 31ஆம் தேதி வரை மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரம் விநியோகிப்பது என்றும், 26 மற்றும் 27 தேதிகளில் மாவட்டத் தலை நகரங்கள், ஒன்றியம், தாலுகா அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது எனவும் முடிவெடுத்துள்ளோம்.  

மே 27அன்று சென்னையில் நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் 4 கட்சித் தலை வர்களும் பங்கேற்க உள்ளோம். இந்த  இயக்கத்திற்கு தமிழக மக்கள் முழுமை யான ஆதரவு அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநிலச் செயலாளர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனின் 39ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ(எம்.எல்) மாநிலக்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.