tamilnadu

img

மக்கள் கோரிக்கைகளுக்காக வலுவான இயக்கம்

தூத்துக்குடி, டிச.5- தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்  பில் அண்ணாநகரில் 150  கி.மீ நடைப்பயண‌ம் நிறைவு  பெற்று மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மக்களின்  அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் 150 கி.மீ., நடை பயணத்தை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்டத் தில் கோவில்பட்டி, திருச் செந்தூர், திருவைகுண்டம் ஆகிய இடங்களிலிருந்து தொடங்கிய 150 கி.மீ., நடை பயணம் தூத்துக்குடியில் ஞாயிறன்று நிறைவடைந் தது.

பொதுக்கூட்டம்

அண்ணாநகரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் தலைமை வகித்  தார். மாநகர் செயலாளர்  தா.ராஜா வரவேற்புரை யாற்றினார். மாநில செயற் குழு உறுப்பினர் எஸ்.நூர் முகம்மது, மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்.அர்ச்சுணன்,  ஆர்.ரசல் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை யாற்றினர். அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்  குழு உறுப்பினர் பா.புவிராஜ் நன்றியுரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ரவீந்திரன்,  பேச்சிமுத்து, அப்பாதுரை, சண்முகராஜ், சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களின் அடிப்படை கோரிக்கைகள் வென்றெடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத்தில் வலு வான இயக்கத்தை தொட ர்ந்து நடத்தும்.

தமிழக அரசு கொண்டு வந்துள்ள மின்கட்டண உயர்வு காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் சிறு, குறு தொழில்களும் பாதிக் கப்பட்டுள்ளன. எனவே தமி ழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மின்கட்டண அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி தமிழக அரசு பொதுமக்களை வற்பு றுத்துவதன் காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே இதை கைவிட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு  பாஜக ஆளாத மாநிலங்க ளில் சட்டமன்ற உறுப்பி னர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கும் நட வடிக்கையில் ஈடுபட்டு வரு கிறது. அவ்வாறு செய்ய முடியாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்  கானா உள்ளிட்ட மாநிலங்க ளில் ஆளுநர் மூலம் போட்டி அரசை நடத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசிய கல்  விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக் கொள்ளாத போதும் தமிழகத்தில் ஆளுநர் தொடர்ச்சியாக பல்கலைக் கழகங்களுடைய துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி ஒன்றிய அரசு ஏற்க னவே கொண்டுவந்த கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கிறார். தமிழகத்தில் ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு காலம் தாழ்தியதன் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா காலா வதி ஆகி உள்ளது, இதன்  காரணமாக சில நாட்களி லேயே ஆன்லைன் ரம்மி தற்  கொலைகள் அதிகரித்து உள்  ளன. எனவே இந்த ஆன் லைன் ரம்மி மசோதா தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கை யெழுத்திட வேண்டும் என்று கூறினார்.