தஞ்சாவூர், நவ.19 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் ஏழு அடி உயர திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டது. தமிழ் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிக ழ்ச்சியில் திருக்குறள் புத்தகத்தை பட்டி மன்ற நடுவரும் மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா வெளியிட்டார். பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்ற நிறுவனர் செ.வினோதினி கொரோனா தொற்றுப் பரவல் இருந்த ஆண்டுகளில் இந்த நூலைத் தொகுத்துள் ளார். 80 பெண்கள், ஏழு சிறுமிகள், எட்டு சிறுவர்கள், 38 ஆண்கள் என 133 பேர் ஒன்றாக இணைந்து இந்நூலை தொகுத்துள்ளனர். நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந. அருள் பேசுகையில், “ஒவ்வொரு குறளின் பொருளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கதை களை உருவாக்கி இந்நூல் படைக்கப் பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியது” என்றார். இந்நிகழ்விற்கு தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் வி.திரு வள்ளுவன் தலைமை வகித்தார். பல் கலைக்கழக பதிவாளர் (பொ) சி.தியாக ராஜன், தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சி தமிழ்ப் புலத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்ற நிறுவனர் செ. வினோதினி வரவேற்றார். அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைப் பேராசிரியர் இரா.இந்து நன்றி கூறினார்.