விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை ரயில் நிலைய முற்றுகை போராட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமையில் நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் டி.குமரவேல், வை.ஜென்னியம்மாள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.