tamilnadu

img

பதினோரு நிமிட நடை - சிதம்பரம் இரவிச்சந்திரன்

சுறுசுறுப்பான பதினோரு நிமிட அன்றாட நடை உலகில் பத்  தில் ஒருவரின் முன் கூட்டிய மரணத்தைத் தடுக்க உதவும் என்று,  இது பற்றி உலகளவில் நடத்தப்பட்ட முதல் விரிவான ஆய்வுகள் கூறு கின்றன. யுகே தேசிய சேவைகள் அமைப்பு (NHS) நலமான வாழ்விற்கு அவசியம் என்று பரிந்துரை செய் துள்ள வாரத்திற்கு ஒரு முறை 150 நிமிட உடற்பயிற்சி ஆலோசனையில் இது 75 நிமிட பயிற்சியால் கிடைக் கக்கூடிய நன்மைகளைப் பெற உதவு கிறது.

நடனமும் நடையும்

சுறுசுறுப்பான நடை, நடனம், மிதி வண்டி ஓட்டுதல், டென்னிஸ் விளை யாடுதல் அல்லது உயரமான இடங்க ளில் ஏறுதல் போன்ற செயல்கள் முன்  கூட்டி ஏற்படும் மரணம், இதய இரத்தக்  குழாய் அடைப்பு நோய்கள், தலை,  கழுத்து மற்றும் நாட்பட்ட இரத்தப்புற்று நோய் (myeloid leukaemia) போன்ற  சில வகை புற்றுநோய்களை தடுக்க உத வும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

10% அகால  மரணங்களைத் தடுக்க

வாரம் ஒரு முறை 75 நிமிடங்களுக்கு  நடுத்தர அளவில் உடற்பயிற்சியில் ஈடு பட்டால் உலகளவில் 10% அகால மர ணங்களைத் தடுக்கலாம் என்று பிரிட்டிஷ் விளையாட்டு மருத்துவ ஆய்விதழில் (British journal of  Sports medicine) இது குறித்து  வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை  கூறுகிறது. நடுத்தர உடற்பயிற்சி என்  பது இதயத்துடிப்பை அதிகப்படுத்தும்,  வேகமாக மூச்சு விடச்செய்யும் உடற்  பயிற்சிகளைக் குறிக்கிறது. ஆனால்  பேச்சை தடை செய்யும் அளவிற்கு  மூச்சு விடுதல் வேகமாக அமையக் கூடாது என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.

நல்ல செய்தி

வாரம் ஒரு முறை 150 நிமிட உடற்  பயிற்சி செய்வது கடினமாக இருக்கும்  என்று நினைப்பவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு நற்செய்தியாக அமை யும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழ கத்தின் மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (MRC) தீவிர நோய்ப்பிரிவு ஆய்வா ளர் டாக்டர் சோரன் ப்ரேஜ் (Dr Søren  Brage) கூறுகிறார். எந்த உடற்பயிற்சியையும் செய்யா மல் இருப்பதை விட ஏதேனும் ஒன்றைச் செய்வது நல்லது.

ஒன்றும் செய்யாமல்  இருப்பதை விட

வாரம் ஒரு முறை 75 நிமிட பயிற்சி  செய்ய இயலுமென்றால் அதை யேனும் செய்ய முயலவேண்டும். பிறகு  75 நிமிடத்தில் இருந்து உடற்பயிற்சி நேரத்தை 150 நிமிடமாக மாற்றிக்கொள்  ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். 94 கூட்டாளிகள் 30 மில்லி யன் மக்களிடம் மேற்கொண்ட 196  ஆய்வறிக்கை விவரங்களை இந்த  ஆய்விற்காக நிபுணர்கள் ஆராய்ந்த னர். 75 நிமிட உடற்பயிற்சியினால் உடற்பயிற்சி விவரங்களை அகால  மரணங்கள், இதய நோய்கள் மற்றும்  புற்றுநோய் பாதிப்புடன் ஆய்வாளர் கள் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். வாரம்  ஒரு முறை 75 நிமிடம் நடுத்தர உடற்  பயிற்சி செய்வதால் 23% அகால மர ணங்கள், 17% இதயக்கோளாறுகள் மற்றும் 7% புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கிறது என்று இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதயத்துடிப்பை அதிகரித்தால்

நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள்  ஓட்டுதல் போன்றவை இதயத்துடிப்பை அதிகரிக்கும் விதத்தில் அமைந்தால்  அது உடல் நலத்திற்கு நல்லது. ஆனால்  நாள்தோறும் பத்து நிமிட நடை கூட  இதய நலம் மற்றும் புற்றுநோய் வரா மல் தடுக்க உதவும் என்று தெரியவந் துள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்க லைக்கழகத்தின் மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தீவிரநோய்ப்பிரிவு ஆய்வா ளர் பேராசிரியர் ஜேம்ஸ் வுட்காக் (Prof James woodcock) கூறுகிறார். நீண்டநாள் நோயின்றி வாழ ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒவ்  வொருவரும் குறைந்தபட்சம் வாரத் திற்கு ஒரு முறை 150 நிமிட நடுத்தர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தால் கூட  ஆறு பேரில் ஒருவர் அதாவது 16%  பேருக்கு நிகழக்கூடிய அகால உயிரி ழப்புகளைத் தடுத்திருக்கலாம். இதையே 75 நிமிடம் சாதாரண உடற் பயிற்சி செய்திருந்தால் பத்து பேரில் ஒருவருக்கு அதாவது 10% பேருக்கு நிகழ்ந்திருக்கக்கூடிய அகால மர ணங்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று  ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டு கின்றன.

உடற்பயிற்சி என்னும்  சுகமான அனுபவம்

நடுத்தர உடற்பயிற்சி என்பது தீவிர விளையாட்டுகளில் ஈடுபடுவது அல்லது ஓடுவதுஇல்லை. வேலை செய்யும் இடத்திற்கு கார் அல்லது இரு  சக்கர வாகனத்திற்கு பதில் நடந்து அல்  லது சைக்கிளில் செல்வதும் நடுத்தர உடற்பயிற்சியே. குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதும் கூட ஒருவகை உடற்பயிற்சியே என்று  பெல்ஃபாஸ்ட் குயீன்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் லிண்ட்ரோ கார்சியா (Dr Leandro Garcia) கூறு கிறார். நம் வாராந்திர நிரலில் சுலபமாக நாம் மகிழ்ச்சியுடன் அனுபவித்து செய் யக்கூடிய எந்த ஒரு செயலும் நம்மை சுறுசுறுப்புடன் இயங்க உதவுபவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சொகுசான வாழ்க்கைமுறை நம்மை சோம்பேறிகளாக்குவதுடன் நம் உட லையும் மனதையும் நோய்களின் கூடா ரமாக மாற்றுகின்றன. கிடைப்பதற்க ரிய இப்பிறவியை இன்பமுடன் அமை தியாக வாழ பதினோரு நிமிட நடைப்  பயிற்சி பற்றிய இந்த ஆய்வு நோயின்றி  மனிதகுலம் வாழ உதவும் என்று மருத்  துவ நிபுணர்கள் நம்புகின்றனர்.