மதுரை, மே 30- மதுரை மாநகராட்சியில் பணிபுரி யும் சுகாதாரம்- பொறியியல் பிரிவு தொழி லாளர்கள் 28 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்களன்று தொடங்கியுள்ளனர். மதுரை மாநகராட்சித் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்டப் பொதுச் செய லாளர் எம்.பாலசுப்பிரமணியன், தலை வர் மீனாட்சி சுந்தரம், பொருளாளர் கருப்ப சாமி, தமிழ்நாடு சுகாதாரப் பணியா ளர்கள் முன்னேற்ற சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அம்சராஜ், தலைவர் பட்டன், மதுரை மாநகராட்சி துப்புரவுத் தொழி லாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகி கள் பூமிநாதன், முத்து ஆகியோர் தலைமை யில் சுமார் 2ஆயிரத்து500 பெண்கள் உட்பட ஆறாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 2017- ஆம் ஆண்டுக்குப்பிறகு ஓய்வு பெற்ற சுகா தாரம் மற்றும் பொறியியல் பிரிவு நிரந்தரப் பணியாளர்களுக்கு பணப்பலன்களை உடன் வழங்க வேண்டும்; அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பி.எப். மற்றும் நிலுவைத் தொகை யை வழங்கவேண்டும்; ஒப்பந்த முறையை ரத்து செய்து அனைத்துப் பணிகளையும் மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும்; உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தினக்கூலி தொழிலாளர்கள் 389 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும்; நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதி யக்குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்; தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என்ற அடிப்ப டையில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊக்கத்தொகை ரூ.15,000த்தை வழங்க வேண்டும்;
வார்டுகளில் ஒப்பந்தப் பணியாளர் களை, மேற்பார்வையாளர் என்ற போர்வையில் நியமிக்கப்பட்ட கட்சிக் காரர்களை வெளியேற்ற வேண்டும்; தூய்மைப் பணியாளர்களை வார்டு கவுன்சி லர்கள் மிரட்டுவதை தடுக்க வேண்டும்; வருகைப் பதிவேட்டை கவுன்சிலர்கள் மேற்பார்வை செய்யக்கூடாது; வார்டு ஊழியர்களை தன்னிச்சையாக வார்டு விட்டு வார்டு மாற்றம் செய்யக்கூடாது; வார்டு அலுவலகத்தை கவுன்சிலர் அலு வலகமாக மாற்றுவதை தவிர்த்து மாற்று இடம் ஏற்பாடு செய்யும் வரை மட்டும் அலுவலகத்தைப் பயன்படுத்த அனு மதிக்க வேண்டும்; பணியாளர்களுக்கு போதுமான பணிக் கருவிகள் வழங்க வேண்டும்; பழுதான குப்பை வண்டிகள் மற்றும் பேட்டரி வண்டிகளை நிர்வாகமே சரி செய்து கொடுக்க வேண்டும்; பொறியியல் பிரிவு ஒப்பந்தப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியக்குழு (அரசாணைப்படி) ஊதியம் வழங்க வேண்டும். பொறியியல் பிரிவு களில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவர்களை ஆட்குறைப்பு என்று நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனை வருக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேலவாசல் மாநகராட்சி தொழி லாளர்கள் குடியிருப்புப் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டப் பொதுச்செயலாளர் எம். பாலசுப்பிர மணியன், 28 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி ஒரு மாத காலம் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. கோரிக்கை கள் நிறைவேறாததால் வேறுவழியின்றி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தமிழக அரசு, மாநகராட்சி நிர்வாகம் எங்களு டைய கோரிக்கையை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
மதுரை மாநகராட்சித் தொழி லாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன் விடுத்துள்ள அறிக்கை:- மதுரை மாநகராட்சி நிர்வாகம், தொழி லாளர்களின் கோரிக்கைகளை அலட்சியம் செய்தே வந்துள்ளது. இப்போது வேறு வழியின்றி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பளம் வழங்கவேண்டும். ஓய்வுபெற்ற வர்களுக்கு உடனடியாக பணப்பயன்கள் வழங்கவேண்டும், வாரிசு வேலை நிய மனத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்துவதிலும், தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறது. பணிக்குத் தேவை யான உபகரணங்கள், உடை, வாகனங்கள் பழுது உள்ளிட்ட எந்தப் பிரச்சனைக்கும் தீர்வுகாண வில்லை. காண்ட்ராக்ட் கொள்ளை காலம் காலமாக நீடிக்கிறது. தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளன்று பெயரளவுக்கு சிறிய தொகையை கொடுத்துவிட்டு வருடக்கணக்கில் அவரை யும் அவரது குடும்பத்தினரையும் அலைய விடுவதும் நீடிக்கிறது. பலர் பணப்பயன் களை பெறாமலேயே ஏக்கத்தில் இறந்துள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பின் மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை களை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனவே, அனைத்து கோரிக்கை களுக்கும் மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், தமிழகஅரசு தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.