தமிழக பொதுப்பணித்துறை அமைச் சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவ ருக்குத் தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை யினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, திரு வண்ணாமலை, கரூர் உட்பட எ.வ. வேலுவுக்குச் சொந் தமான சுமார் 80 இடங்களில் சி.ஆர். பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வரு மானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் இரண் டாவது நாளாக சனிக்கிழமையன்றும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பனின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.