இராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் சென்னை வந்தனர்
இலங்கை சிறையிலிருந்து விடுவிப்பு
மீனம்பாக்கம், மே 3 - இராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர், கடந்த பிப்.23 அன்று விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண் டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடலோரக் காவல் படை மீன வர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து 25 பேரையும் கைது செய்தது. அவர்களை இலங் கைக்கு அழைத்து சென்று, அங்குள்ள நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், 25 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க ருக்கு, அவசர கடிதம் எழுதினார். உடனே இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரி களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை சிறை யில் இருந்து 25 பேரையும் மீட்டனர். இவர்கள் வெள்ளியன்று இரவு இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர். 25 மீனவர்களையும் தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய் திருந்த வாகனம் மூலம் இராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.