மண்டல விற்பனைக் குழு தேர்தலில் சிஐடியு சார்பில் 16 பேர் போட்டியின்றி தேர்வு!
ஜூன் 26 தேர்தல் நடைபெறுகிறது
சென்னை, ஜூன் 24 - நகர விற்பனைக்குழு தேர்தலில் மண்டலம் 3ல் சிஐடியு சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சென்னை மாநகரம் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் தலா ஒரு நகர விற்பனைக்குழு அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நகர விற்பனைக்குழுவிற்கும் 6 வியாபாரிகள் வீதம் 90 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் ஜூன் 26ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 18ந் தேதியும், மனுக்கள் பரிசீலனை ஜூன் 19ந் தேதியும் நடைபெற்றது. ஜூன் 20 வேட்பு மனுக்கள் திரும்ப பெற கால அவ காசம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. இந்த தேர்தலில் சென்னை மாநகர் சிறு கடை வியாபாரி சங்கங்க ளின் கூட்டமைப்பு, சென்னை மாவட்ட சாலையோர சிறு கடை விற்பனையாளர்கள் சங்கம் (சிஐடியு), சாலை யோர விற்பனையாளர்கள் மற்றும் சிறுகடை தொழி லாளர்கள் சங்கம் (சிஐ டியு), பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புற நகர் சிறுகுறு சாலையோர அமைப்புசாரா வியாபாரி கள் சங்கம், சென்னை மற்றும் புறநகர் முறை சாரா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆகிய அமைப்புகள் இடத்திற் கேற்ப இணைந்து போட்டி யிடுகின்றன. வடசென்னை வடசென்னை பகுதியில் 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மண்டலம் 1ல் கே. கபூர், டி.பொம்மி, எம்.மலர், எஸ்.ஜெயச்சித்ரா, தமீம்அன்சாரி, பாளையம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்க ளில் தமீம் அன்சாரி, பாளையம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மண்டலம் 2ல் புகழேந்தி, கலா, முத்துக்குமார், சற்குணராஜ், யாஷ்மின் பேகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் சற்குணராஜ், யாஷ்மின்பேகம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மண்டலம் 3ல் எம்.புவனேஸ்வரி, ஆர்.மகேஷ், எஸ்.சுமதி, என்.பாலன் நடராஜ், எம்.முகமது முஜீப், கே.லட்சுமணன் ஆகி யோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மண்டலம் 4ல் மோனிஷா, ரேகா, மீரா மைதீன், சுகுமார், சீனிவாசன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் சுகுமார், சீனிவாசன், கோ பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மண்டலம் 6ல் ஆரோக்கியமேரி, ஷபீர், வி.செல்வகுமாரி, எஸ்.வி.மலையம்மாள் ஆகி யோர் போட்டியிடுகின்றனர். மத்தியசென்னை மண்டலம் 5ல் கிட்டு (எ) கிருஷ்ணமூர்த்தி, எம்.மணி, வி.சாகுல் அமீது, கே.பலராமன், ஏ.முகமது, பா.பாக்கியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மண்டலம் 8ல், மா.வைத்தியலிங்கம், பொ.கிருஷ்ண மூர்த்தி, அ.ரசூல், டி.மாலதி ஆகி யோர் போட்டியிடுகின்றனர். மண்டலம் 9ல், அ.நதியா, ரா.சுரேஷ், அ.ஜெனிபர், எஸ். செல்வம், கி.ஜான் டிசில்வா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், எஸ்.செல்வம், கி.ஜான் டி.சில்வா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தென்சென்னை மண்டலம் 10ல் எஸ்.கருணாநிதி, எம்.நைனா முஹம்மது, எம்.ரேவதி, பி.மணி, எஸ்.சித்ரா, சி.செல்லையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மண்டலம் 11ல் தமிழ்ச்செல்வி, கார்த்திக், அஜித்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்த னர். இதில், அஜித்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மண்டலம் 13ல் எஸ்.தனலட்சுமி, ஏ.சுபைதா, பி.ரமேஷ், ஏ.செல்வி ஆகி யோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தல் வாக்கு பதிவு நாள் நெருங்கிய நிலையில் பகுதிவாரியாக தீவிர பிரச்சாரம் நடை பெற்று வருகிறது.