இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உறுதியாகப் புரிந்துகொண்டுள்ளது. இது நம் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் நலன்களுக்கு எதிராகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்நிய மூலதனமானது உள்நாட்டு சேமிப்புக்கு மாற்றாகாது
மேலும், வெளிநாட்டு மூலதனம் உள்நாட்டு சேமிப்பிற்கு மாற்றாக இருக்கவே முடியாது. எனவே, உள்நாட்டுச் சேமிப்பை அந்நிய மூலதனத்திடம் ஒப்படைப்பது பொரு ளாதார அல்லது சமூக முன்னேற்றத்திற்கு ஒருபோதும் உதவாது. இந்தியா மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு நாடு என்ற அடிப்படையில், அரசு அதன் அனைத்துக் குடிமக்களுக்கும் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான சேமிப்பின் மீது கட்டாயம் அதிகக் கட்டுப் பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
அரசு, தற்போதுள்ள இன்சூரன்ஸ் சட்டங்களில் திருத்தங்கள் செய்து ஒருங்கி ணைந்த ஒரு சட்டத்தைக் கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருத்தங்கள் ஆயுள் இன்சூரன்ஸ் வணிகத்தை தேசிய மயமாக்க வேண்டிய கட்டாயத்தை அரசுக்கு ஏற்படுத்திய, 1956-க்கு முந்தைய நிலைமைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லும்; அந்த அனுபவங்களின் அடிப்ப டையிலேயே அரசு, நிதிமுதலாளிகளின் கட்டுப் பாட்டின் கீழ் இன்சூரன்ஸ் அனுமதிக்கப் படக்கூடாது என்று எச்சரிக்கை அடைந்தது
ஆனால், தற்போதைய அரசு நிதி முதலாளிகள் மற்றும் வங்கித்துறை முத லாளிகள் வசம் தற்போது இன்சூரன்ஸ் துறையை ஒப்படைத்து, மக்களின் சேமிப்பி ற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது.
கார்ப்பரேட் மீதான அக்கறையை மக்கள் பக்கம் திருப்புக!
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது என்ற பெயரால், மக்களில் ஒரு சிறு பிரி வினரின் மீது நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தும் அதே வேளையில், பெருவாரி யான மக்களின் நலன்களைப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. அரசு, கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மீது நியாயமான வரியைக் கூட விதிக்க மறுக்கிறது. கார்ப்பரேட் முத லாளிகளின் லாபம் அபரிமிதமாகப் பெருகி வரும் நிலையில், தொழிலாளர்களின் ஊதியம் தேக்கமடைந்து வருவதை பொரு ளாதார ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தொழிலாளர்கள் தங்கள் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் நிதிநிலை அறிக்கை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இன்சூரன்ஸ் சட்டம் 1938, எல்.ஐ.சி. சட்டம் 1956 மற்றும் ஐ.ஆர்.டி.ஏ. சட்டம் 1999 ஆகிய சட்டங்களைத் திருத்தும் பிற்போக்குத் தனமான முன்மொழிவுக்கு எதிராக அரசை சங்கம் எச்சரிக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமான நிலையி லிருந்து விலகி மக்கள் நலனை மைய மாகக் கொண்டதாக பொருளாதாரக் கொள்கை களை மாற்றியமைக்க வலியுறுத்துகிறது. கார்ப்பரேட் துறையின் லாபத்தை விட, மக் களின் நலன்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுஉள்ளது. இதனிடையே ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் செவ்வாயன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.