மாவட்ட ஆட்சியர் தகவல்
சிவகங்கை, ஜூலை 20- சிவகங்கை மாவட்டம், திருப்புவ னம் வட்டத்திலுள்ள கானூர், பழைய னூர் மற்றும் இதர 17 கண்மாய்கள் பாசன வசதிபெறும் வகையில், வைகை ஆற்றின் குறுக்கே, திருப்புவ னம் அருகில் புதூர்-மடப்புரம் இடையே அமைக்கப்படவுள்ள அணை கட்டும் பணிகள் குறித்தும் மானாமதுரை வட்டத்திலுள்ள நாட்டார் கால்வாயி னை சீரமைக்கும் பணிகள் குறித்தும் ஜூலை 18 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கை யில், வைகை ஆற்றின் குறுக்கே திருப்புவனம் புதூர் கிராமம் அருகில் வைகை ஆற்றின் இடதுபுறம் பிரியும் கானூர் கால்வாய் மற்றும் வலதுபுறம் பிரியும் பழையனூர் கால்வாய் ஆகிய வை மிக முக்கியமான பிரிவு கால்வாய் கள் அகும். இதில் கானூர் கால்வாய் மூலமாக கானூர் கண்மாய் மற்றும் இதர ஐந்து கண்மாய்களைச் சேர்ந்த 4115.46 ஏக்கர் நிலங்களும் பழையனூர் கால்வாய் மூலமாக பழையனூர் கண்மாய் மற்றும் இதர 12 கண்மாய்களைச் சேர்ந்த 2860.27 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 19 கண்மாய்களைச் சேர்ந்த 6975.73 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்சமயம் வைகை ஆற்றின் படுகை மட்டும் தொடர்ச்சியான மண் அரிப்பு காரணமாக சுமார் 1.20 மீட்டர் முதல் 1.80 மீட்டர் வரை தாழ்ந்துபோய் உள்ளது. இதனால் வைகை ஆற்றில் சாதாரண காலங்க ளில் வைகை பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு உரிய பாசன பங்கீட்டு நீர் 1000 முதல் 2000 கனஅடி வரை வழங்கப்படும் போது மட்டுமின்றி, வெள்ள காலங்களில் கணிசமான நீர் ஆற்றில் செல்லும் போது கூட மேற்காணும் கால்வாய்களில் ஏறிச் செல்ல கடினமான நிலை உள்ளது. இதனால் மேற்காணும் இப்பழைய வைகை ஆயக்கட்டு பகுதி கண்மாய்க ளுக்கு சட்டப்படியாக கிடைக்க வேண்டிய பங்கீட்டு நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிப்படைவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே இந்த இரண்டு கால்வாய்க ளும் பிரியும் இடத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கானூர் மற்றும் பழையனூர் கண்மாய்களுக்கான அணைக்கட்டு கட்டப்படுவதன் பய னாக வைகை பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள சுமார் 20 கிராமங்க ளில் விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு பாசன வசதி கிடைத்து 6975.73 ஏக்கர் நிலங்களுக்கு வைகை ஆற்று நீர் நிரந்தரமாக பகிர்ந்து அளிக்கப்படுவதை உறுதி செய்ய இயலும். மேலும் இத்திட்டம் செயல்பாட்டி னால், பெரும் வெள்ள காலங்களில் வீணாக கடலுக்குச் செல்லும் நீர் திருப்பி விடப்பட்டு கானூர் கண்மாயின் கழுங்கின் வழியாக வெளியேறி உபரி நீர் உப்பாற்றில் ஓடி, செய்களத்தூர் அணைக்கட்டை அடைந்து அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்தின் வறட்சி பகுதியான இளையான்குடி பகுதிக்கு சுப்பன் கால்வாய் வழியாக திருப்பி விட முடியும். அதே போல், பழையனூர் கண்மாய் செல்லும் நீர் அக்கண்மாயின் கழுங்கின் வழி யாக உபரி நீராக வெளியேறி, கிருது மால் நதியில் சென்று வறட்சி பகுதிக ளான கட்டணூர், வீரசோழன் மற்றும் அபிராமம் பகுதிகளுக்கு பயன்பெ றும் வகையில் நீரை திருப்பி விவ சாயத்திற்கு பயன்படுத்த இயலும். மேலும் இதன் பயனாக மேல் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் திருப்புவனம் நகரம் மற்றும் மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீரின் தரம் உயர்வதற்கு இவை அடிப்படையாக அமைகிறது. இதேபோன்று, நாட்டார் கால்வா யினை ரூ.967.46 லட்சங்கள் மதிப்பீட்டில் சீரமைத்து, புதிய தலைமதகுகள் கட்டி, மானாமதுரை வட்டத்திலுள்ள 17 கண்மாய்களுக்கும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்திலுள்ள 3 கண் மாய்களுக்கும் மற்றும் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்திலுள்ள 1 கண்மாய்க்கும் தண்ணீர் வழங்கும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. நாட்டார் கால்வாய் மூலம் 21 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. இக்கண்மாய்கள் மூலம் சுமார் 1430.22 ஹெக்டேர் ( 3532.64 ஏக்கர் ) பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. இப்பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்பட்டு வருகின்ற பருவ மழைக் காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதார அமைப்பு செயற் பொறியாளர் ஏ.வி.பாரதிதாசன், உதவி செயற் பொறியாளர் மோகன்குமார், உதவிப் பொறியாளர்கள் செந்தில்குமார், வினோத், பூமிநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.