tamilnadu

img

‘மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’

‘மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’

அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புதிய  கல்விக் கொள்கையை அமல்படுத் தக் கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, உச்சநீதிமன்றம், ‘புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துங்கள்’ என்று மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க முடி யாது என்று தெரிவித்தது. மேலும்,  ஒரு விவகாரம் அரசியல் சாசனத் துக்கு முரணாக உள்ளது என்றால்  நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்றும், இந்த விவகாரம் அடிப் படை உரிமையை மீறுவதாக இல்லை என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  அரசியலமைப்பின் 32 ஆவது  பிரிவின்கீழ் எந்தவொரு மாநிலத் தையும் தேசிய கல்விக் கொள் கையை ஏற்றுக் கொள்ள கட்டாயப் படுத்த, நீதிமன்றம் எந்த உத்தரவை யும் பிறப்பிக்க முடியாது என்று நீதி பதிகள் கூறினர். மேலும், தேசிய கல்விக் கொள்கை போன்ற ஒரு கொள்கையை ஏற்றுக் கொள்ள ஒரு மாநிலத்தை நேரடியாக கட்டா யப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள சமூகவலைதளப் பதிவில், “தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு, கேரளா,  மேற்குவங்கம் ஆகிய மாநிலங்க ளுக்கு உத்தரவிடக் கோரிய பொது நல மனுவை தள்ளுபடி செய்துள்ள  உச்சநீதிமன்றம், “தேசிய கல்விக்  கொள்கை 2020 போன்ற எந்த வொரு கொள்கையையும் ஏற்றுக்  கொள்ள மாநிலங்களை நீதிமன்றத் தால் கட்டாயப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளது. உச்சநீதி மன்றத்தின் இக்கருத்தை அரசிய லமைப்புச் சட்டத்தின் வழி நின்று  வரவேற்கிறோம். அரசியல மைப்புச் சட்டத்தை விட உயர்ந்த வர்கள் யாரும் இல்லை. எனவே, மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.