தஞ்சாவூரில் “நல்லேர் பூட்டும்” விழா
சித்திரை திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்க ளில் நல்லேர் பூட்டும் விழாக்கள் திங்கள் கிழமை தொடங்கியது. விவசாயப் பணிகளை தொடங்க ஒவ்வொரு விவசாயியும் நல்ல நாள், நேரம் பார்த்து சாகுபடி பணிகளை தொடங்குவது வழக்கம். அதே போல் தமிழர்களின் தமிழ் மாத ஆண்டு துவக்கத்தின் போது, நல்ல நாள் பார்த்து ஏர் பூட்டிய பின்னர் தான், வயலில் அந்த ஆண்டுக்கான சாகுபடியை துவங்குவர். இந்த நிகழ்வு “நல்லேர் பூட்டும்” விழா வாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. சில பகுதிகளில் பொன்னேர் பூட்டும் விழா என்றும் அழை்கப்படுகிறது. அதன்படி, சித்திரை திருநாள் தொடக்க தினமான திங்கள்கிழமை தஞ்சாவூர் மாவட் டத்தில் பள்ளியக்ரஹாரம், ராவுசாப் பட்டி, தங்கப்ப உடையான்பட்டி, வேங்க ராயன்குடிக்காடு, கணபதி அக்ரஹாரம், திரு வையாறு அருகே விளாங்குடி, பேரா வூரணி அருகே மாவடுகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நல்லேர் பூட்டி, நிகழாண்டு சாகுபடியில் அதிக மகசூலும், எவ்வித இடையூறும் இருக்ககூடாது என பிரார்த்தித்தனர். முன்னதாக மாடுகளை குளிப்பாட்டி, நல்லேர் பூட்ட வயலில் இயற்கை உரம், நவதா னிய விதைகளை தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியை படையலிட்டு உழவு மாடுகளை கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏர் பூட்டினர். தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கைய ளவு விதைநெல் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது. மாவடுக்குறிச்சியிலே ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் ஏரில் பூட்டப் பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சைபர் கிரைம் பயிற்சி நாகர்கோவில்,
ஏப். 15 கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் முன்னெடுப்பில் மாவட்டத்திலுள்ள அனைத்து, அதி காரிகள் மற்றும் காவலர்கள் சைபர் கிரைம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள பயிற்சி செவ்வாயன்று ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கப்பட்டது. சைபர் கிரைம் பயிற்சியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு, பொது வான குற்றங்கள், CEIR portal, NCRP portal பற்றிய வகுப்பு கள், மற்றும் photography, video graphy Scientific evidence போன்ற வகுப்புகளும் நடைபெறுகிறது . சைபர் கிரைம் கூடுதல் கண்கா ணிப்பாளர் நாகசங்கர் மற்றும் சைபர் கிரைம் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்களால் பயிற்சி வழங்கப்படுகிறது.