tamilnadu

img

‘வீழ்ந்த கடவுள்கள்’ - ஃபாலென் காட்ஸ் (Fallen Gods) - எஸ்.இளங்கோ

 இப்படம் 2009 இல் கியூப நாட்டின் தலைநகர் ஹவானாவில் நடைபெற்ற லத்தீன் அமெரிக்க திரைப்பட விழாவில் பல விருதுகளை வென்றுள்ளது.   1989 இல் சோவியத் யூனியன் வீழ்த்தப்பட்டதும், கியூபாவின் பொருளாதாரம் பெருத்த அடி வாங்கி யது. கியூபாவின் 85 விழுக்காடு ஏற்றுமதி திடீரென நின்று போனது.  சோவியத் யூனியன் வழங்கி வந்த பல உதவிகள் நிறுத்தப்பட்டன. 1959 புரட்சிக்குப் பின்னர் மெல்ல வளர்ந்து வந்த கியூபப்  பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.  இதனால் நாட்டில்  ஏழ்மை பாய்ச்சலெடுத்தது. வேறு வழியின்றி வறுமை யைச் சமாளிக்க 1990 களில் ஹவானா நகரில் அனு மதிக்கப்பட்ட “பாலியல் சுற்றுலா” (Sex Tourism)  இருந்துள்ளது. 2005க்குப் பின்னரே இது படிப்படியாக  ஒழிக்கப்பட்டுள்ளது. புரட்சிக்கு முன்னர், சுற்றுலாவாசிகள் மற்றும்  பணக்கார அமெரிக்கர்களின் கேளிக்கை மைய மாகவே இருந்து வந்துள்ளது கியூபா.  இந்நிலை 1600ஆம் ஆண்டுகளிலிருந்தே துவங்கியது என்கிறார்கள் வரலாற்றியலாளர்கள். காரணம் அழகிய கடற்கரைகளைக் கொண்ட நாடு கியூபா.  உட்பகுதியில் கரும்புத்தோட்டங்களை பெரு முதலாளிகள் சொந்தமாக வைத்திருந்தனர். கடற் கரைகளில் கேளிக்கை விடுதிகள் நிறைந்திருந்தன.  1900மாவது ஆண்டுகளில் ஹவானாவில் பாலியல்  தொழில் உச்சத்திலிருந்தது.  பாலியல் தொழிலுக் கென்றே கருப்பினப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இங்கு கொண்டுவரப்பட்டனர்.  காஸ்ட்ரோ தலைமை யிலான புரட்சிக்குப் பின்னர் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பெண்கள் பாலியல் தொழிலிருந்து மீட்கப்பட்டு மாற்று வேலைகளில் அமர்த்தப்பட்டனர்

1900-ஆவது ஆண்டுகளில் ஆல்பர்டோ யாரினி  என்பவன் ஹவானாவின் பாலியல் தொழில் தாதா வாக இருந்திருக்கிறான். தொழில் போட்டியின் காரணமாக 1910 இல் யாரினி சுட்டுக்கொல்லப்பட்டுள் ளான். முன்னாள் பாலியல் தொழிலாளி மற்றும் அவனது காதலியின் மடியில் அவன் இறந்து போனான். காதலி தனது தலை முக்காட்டுத் துணியி னால் அவனது இரத்தத்தை துடைத்ததாக செவி  வழி வரலாறு இருக்கிறது.  பாலியல் தொழிலாளி களால் யாரினி கடவுளைப் போல வணங்கப்பட்டு வந்துள்ளான்.  புரட்சிக்குப் பின்னரும் ஹவானாவில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள், தரகர்கள் யாரினியை ரகசியமாக வழிபட்டு வந்துள்ளனர்.  இந்தப் பின்னணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 1990 களில் பல்கலைக்கழக முனைவர் பட்டத் திற்காக லாரா என்ற பெண்மணி பாலியல் தொழிலாளி களின் வாழ்க்கை குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரை  தயாரிக்கிறார். அதற்காக பாலியல் தொழிலாளி களை, தரகர்களை சந்திக்கிறார்.  அப்போது யாரினி யின் ரத்தம் தோய்ந்த தலை முக்காட்டுத் துணி ஒரு  ரகசியமான வழிபாட்டுத் தலத்தில் இருப்பதாக அறிந்து அதனைத் தேடத் துவங்குகிறார்.  இது  தேவையற்ற வேலை என்று அவருக்கு எச்சரிக்கைகள் தரப்படுகிறது. ஆனால் ஆர்வமிகுதியினால் அவர்  ஹவானாவின் ஆபத்து மிகுந்த பாலியில் தொழில் நடக்கும் இடங்களுக்குச் செல்கிறார்.  ரோசாண்டோ என்ற தரகனிடம் அது இருப்பதாக அறிந்து அவனைச் சந்திக்க விரும்புகிறாள்.

ஆல்பர்ட்டோ என்ற இளைஞன் தனது சிறு வயதுத் தோழிகள் இருவர் பாலியல் தொழிலில் இருப்பதால் அவர்களுக்கு சிறுசிறு உதவிகள் செய்ய அவ்வப் போது போய் வருகிறான்.  இருவரில் ஒருத்தியான சாண்ட்ராவை அவன் காதலிக்கிறான்.  அவளும் அவனைக் காதலிக்கிறாள்.  இரண்டு ஆண்டுகள் பிரான்ஸ் சென்று விட்டு திரும்பி வருகையில்  சாண்ட்ரா, தரகன்  ரோசாண்டோவின் ஆதரவில் இருப்பதோடு ரோசாண்டோவின் பிரியத்துக்குரிய காதலியாகவும் மாறி யிருக்கிறாள்.   இதனால் ஆல் பர்ட்டோ விரக்தியுடன் சுற்றி வருகிறான். சட்ட  விரோதச் செயல்களில் ஈடுபடுகிறான். இரத்தம் தோய்ந்த துணியைத் தேடிவரும் லாராவுக்கு உதவுவதாகக் கூறி போதை மருந்து கொடுத்து அவளை வன்புணர்வு செய் கிறான். இதை அறியும் சாண்ட்ரா ஆல்பர்ட்டோவைக் கண்டிக்கிறாள். ஒரு சண்டையைத் தொடர்ந்து  அவர்களிடையே மீண்டும் காதல் மலர்கிறது. அவர்கள் மெக்ஸிகோ ஓடிப்போகத் திட்டமிடுகிறார்கள். இதைத்தடுக்கும் விதமாக ரோசாண்டோ ஆல்பர்ட்டோவை சுட்டுக்கொல் கிறான். பதிலுக்கு சாண்ட்ரா ரோசாண்டோவை சுட்டுக்கொல்கிறாள். சோஷலிச ¬ கியூபாவின் கடினமான காலங்களை  இப்படம் பதிவு செய்திருக்கிறது.  நடிகர்கள் அந்தந்தப் பாத்திரங்களிலேயே வாழ்ந்திருக்கிறார் கள்.  காமெரா, படத்தொகுப்பு, இசை அனைத்தும்  சிறப்பாக அமைந்து திரைக்கதையை விறுவிறுப் பாகக் கொண்டு செல்கின்றன.