tamilnadu

img

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!

பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு  அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு'

சென்னை, ஜூன் 14 - பிரதமர் பெயரில் செயல்படுத் தப்படும் திட்டங்களுக்கெல்லாம், ஒன்றிய அரசைக் காட்டிலும் அதிக மாகப் படியளப்பது மாநில அரசு தான். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறி யும் பழக்கத்தை ஒன்றிய பாஜக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல மைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும், ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர் களைக் காட்டிலும் அதிகமாகப் படி யளப்பது மாநில அரசுதான். படையப்பா படக் ‘காமெடி’ போல “மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது” என  சேலம் அரசு விழாவில் பேசி னேன் என்பதை விட, பேச வேண்டிய  நிலைக்கு உள்துறை அமைச்சரின்  அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூற வேண்டும். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறி யும் பழக்கத்தை ஒன்றிய பாஜக அரசு மாறிக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.