tamilnadu

img

மின்தடையால் ஸ்தம்பித்தது மும்பை

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மின்தடையால் ஸ்தம்பித்துள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பெரும் பாலான பகுதிகளில் இன்று காலை 10 மணிமுதல் மாலை 5 வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல பகுதிகளில் மின்சார ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. 
இதையடுத்து கல்வா பட்கே மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பகோளாறு காரணமாக தானே மற்றும் மும்பை இடையிலான பகுதிகளின் மின் துண்டிப்பு ஏற்பட்டது. ஊழியர்கள் அதைசரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று மகாராஷ்டிர மின்சார துறை அறிவித்துள்ளது. மின் தடையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.