பெரம்பலூர், ஜூன் 11- பெரம்பலூரில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ராஜாசிதம்பரம் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருள்கள் வணிக ஊக்கு விப்பு அவசரச் சட்டம், விவசாயிக ளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான அவசரச் சட்டம் ஆகியற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தாமோதரன், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், கட்டுமான சங்கம் சீனீ வாசன் மற்றும் நிர்வாகிகள் சின்ன சாமி, சாமிதுரை, மகேஸ்வரி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.