tamilnadu

img

ஆல்மைட்டி வித்யாலயா விழா

 பெரம்பலூர், ஆக 1. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் உலக காகித தின விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ. ராம்குமார் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சியில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி குழந்தை கள் காகிதத்தால் செய்த அழகிய பொம்மைகள், மரங்கள், மலர்கள் மற்றும் காகித கப்பல் ஆகியவை செய்து வகுப்ப றையில் கண்காட்சியாக அலங்கரித்தனர். பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், சந்திரோதயம், ஹேமா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளி யில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.