வயது முதிர்ச்சியால் மூத்த விமர்சகரும், பிரபல எழுத்தாளருமான டாக்டர் ஜி.எஸ்.அமுர் திங்களன்று காலமானார் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். அவர் வயது 95 ஆகும். கன்னடம் மற்றும் ஆங்கிலம் இரண்டும் சிறந்த தேர்ச்சி பெற்ற கல்வியாளர். சாகித்ய அகாடமி விருது, ராஜ்யோத்ஸவ விருது மற்றும் பாரதிய பாஷா உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கன்னடத்தில் அவர் மிகவும் பாராட்டப்பட்ட புத்தாக்கங்களில் ஆர் கன்னட கடம்பரியா பெலவனிகே, அர்த்தலோகா, வியவாசயா, கடம்பரியா ஸ்வரூபா ஆகியவையாகும்.
ஆங்கில படைப்புகளில், தடைசெய்யப்பட்ட பழம் (Forbidden Fruit), இந்தோ-ஆங்கிலியன் புனைகதை பற்றிய காட்சிகள் (Indo-Anglian Fiction) மற்றும் காமன்வெல்த் இலக்கியத்தில் காலனித்துவ உணர்வு (Colonial Consciousness in Commonwealth Literature) ஆகியவை அடங்கும்.அமுருக்கு ஆங்கிலம் மற்றும் கன்னடம் மீது சமமான நாட்டம் இருந்தது. நவீன கன்னட இலக்கியங்களை விமர்சிப்பதில் அவர் முன்னணி நபராக இருந்துள்ளார்.