புதுதில்லி, ஜூலை 10- கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் எனக் குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும், காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசு பதில் அளிக்கவில்லை எனக்கூறி, மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்புச் செய்தனர். கர்நாடகாவில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக 13 எம்எல்ஏக்கள் ‘போர்க்கொடி’ உயர்த்தியுள்ளனர். இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் இப்பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் எதி ரொலித்து வருகிறது. புதனன்று மக்களவை கூடியதும், கர்நாடக அரசியல் குழப்பத் திற்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்க மிட்டனர். ஆனால் மத்திய அரசு சார்பில், எந்த விளக்கமும் அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் எம்.பிக்கள்., மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். இதே பிரச்சனையை எழுப்பி, மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 11 மணிக்கு அவை தொடங்கியதும், கேள்வி நேரம் முடிந்தவுடன் கர்நாடக அரசியல் குழப்பம் குறித்து பேச அனுமதிக்குமாறு, காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், தொடர்ந்து முழக்கமிட்டால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும், அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து, 3 மணி வரையிலும் மாநிலங் களவை ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் மும்பையில் கைது இதனிடையே கர்நாடகாவில் அரசியல் குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை யில், மும்பையில் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்கச் சென்ற கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை நட்சத்திர விடுதியில் தங்கி யிருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க காங்கிரஸ் மூத்தத் தலைவரும், அமைச்சரு மான டி.கே. சிவக்குமார் புதனன்று காலை வந்தார். ஆனால், அவரை உள்ளே அனு மதிக்க காவல்துறை மறுத்தது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதியில் தனக்கு ஒரு அறை முன்பதிவு செய்யப் பட்டதாகவும், ஆனால் விடுதிக்குள் நுழைய காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகவும் சிவக்குமார் கூறினார். பின்னர் நட்சத்திர விடுதியின் வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப் பட்டார். எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.