இந்தியாவில் ஒருநாளில் கொரோனா தொற்று 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 29, 429 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 9,06,752 லிருந்து 9,36,181 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,727 லிருந்து 24,309 ஆக உயர்ந்து உள்ளது. 24 மணி நேரத்தில் 582 பேர் உயிரிழந்து உள்ளனர். 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 20,572 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 லிருந்து 5,92,032 ஆக அதிகரித்து உள்ளது.