tamilnadu

img

கொரோனாவுக்கு 14 மாத பச்சிளம் குழந்தை பலி

அகமதாபாத்:
பிறந்து 14 மாதமே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தது.

 குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 14 மாத பச்சிளம் ஆண் குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மாவட்டத்திலுள்ள ஜி.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஏப்.5-ஆம் தேதி முதல் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் குழந்தையின் இதயம், கிட்னி ஆகியவை செவ்வாய்க்கிழமை செயலிழந்து. இருப்பினும் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை குழந்தை உயிரிழந்தது.

குழந்தையின் மரணம் குறித்து ஜாம்நகர் மாவட்ட நிர்வாகம் கூறுகையில், திங்கட்கிழமையன்றே குழந்தையின் நிலைமை மோசமாகத்தான் இருந்தது என கூறியுள்ளது.குஜராத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளர் ஜெயந்தி ரவி கூறுகையில், "குழந்தையை காப்பாற்ற சுகாதார அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை முயன்றனர், ஆனால் குழந்தையின் பல உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை.