புதுதில்லி:
இந்தியாவில் திங்கள்கிழமை மாலை ஐந்து மணி நிலவரப்படி 17,656 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 559 பேர் உயிரிழந்ததாகவும், 2,842 பேர் நலமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் மாஹே, கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிய தொற்று எதுவும் இல்லை என்றும், மேலும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 4,203 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 223 ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் 2,003 பேரும், குஜராத்தில் 1,851 பேரும், இராஜஸ்தானில் 1,478 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 1,520 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 1,485 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 1,176 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை ஆயிரம் எண்ணிக்கையை தாண்டிய பட்டியலில் எழு மாநிலங்கள் உள்ளன. ஆயிரத்தை நெருங்கம் மாநிலங்களில் அடுத்த இடத்தில் தெலுங்கானா உள்ளது. இங்கு 873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை மாலை ஐந்து மணி நிலவரப்படி 17,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,842 பேர் குணமடைந்துள்ளனர். 559 பேர் உயிரிழந்துள்ளனர்.