கொச்சி:
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் செயலாளராக அதிகாரப்பூர்வமாக மட்டுமே கேரள முதல்வரை தெரியும் என்றும், தூதரக ஜெனரலுடன் அல்லாமல், ஷார்ஜா ஆட்சியாளரின் கேரளவருகையின்போது முதல்வரைஒரு முறை மட்டுமே பார்த்துள்ள தாகவும் அமலாக்கத்துறையிடம் சொப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.2018 இல் ஷார்ஜாவின் ஆட்சியாளர் ஷேக் சுல்தான் அல் காசிமிகேரளா வந்தார். அவரை வரவேற்பது குறித்து முதலமைச்சர் விசாரித்திருந்தார். இது குறித்துதெரிவிக்கவே முதல்வரை சந்தித் தாகவும், முதலமைச்சருடன் தனிப்பட்ட உறவு இல்லை, அதிகாரப்பூர்வ உறவு மட்டுமேஇருந்தது என்றும் சொப்னாவின் வாக்குமூலம் கூறுகிறது. அமலாக்கத் துறையினரால் ஆகஸ்ட்10 அன்று சொப்னாவின் இந்தவாக்குமூலம் பதிவுசெய்யப் பட்டது.