பாகிஸ்தானும், சீனாவும் விஷவாயுவை காற்றில் கலந்து இந்தியாவுக்கு அனுப்பி இருக்கலாம் என்று உத்தரபிரதேச பாஜக தலைவர் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
தலைநகர் தில்லியில் தீபாவளிப்பண்டிகைக்கு பின் காற்றுமாசு பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்றுமாசுபாட்டுக்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் வாயுக்கள், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் எரிக்கப்படும் காய்ந்த வயல்கள் என்று பல காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தில்லியில் காற்று மாசை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு விவசாயிகள் தீ வைப்பதை தடுக்க காவல் துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளுக்கும், வாகனங்களுக்கும் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையல் நமது அண்டைநாடுகளாக பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் காற்று மாசை ஏற்படுத்துவதற்காக காற்றில் விஷவாயுவை அனுப்பி இருக்கலாம் என்று தெரிவித்தார்.
மீரட்டில் கூறுகையில், நமது அண்டைநாடுகளாக பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இந்தியாவில் காற்று மாசை ஏற்படுத்துவதற்காக காற்றில் விஷவாயுவை அனுப்பி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து விஷ வாயு வருகிறதா என்பதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வினீத் அகர்வால் வலியுறுத்தினார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதவி ஏற்றதில் இருந்து பாகிஸ்தான் விரக்தியுடன் உள்ளது. எந்த ஒரு போரிலும் வெல்ல முடியாத நிலையில் இருக்கும் பாகிஸ்தான் ஏதேனும் தந்திரங்களை உபயோகிக்கக்கூடும் என்று சர்ச்சையை கிளப்பி நாட்டின் அமைதியை குலைக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.