சண்டிகர்:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட அந்தகுடும்பத்தினரை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிரட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஹத்ரஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சனிக்கிழமையன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறன்று பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேரணி தொடங்கியது. பேரணி துவக்க நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஹத்ரஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை நான் சந்திதேன். இளம்பெண்ணை கொலை செய்தவர்கள் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களது வீட்டிலேயே பூட்டப்பட்டனர். மாவட்டமாஜிஸ்திரேட்டும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அந்த குடும்பத்தை மிரட்டுகின்றனர். இது தான் இந்தியாவின் தற்போதைய நிலைமை யாக உள்ளது. குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால்,பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.