tamilnadu

img

சிஏஏ வுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 
மோடி அரசு சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பினராயி விஜயன் தலைமையிலான கேரளஅரசு குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதால் இச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 
முன்னதாக கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. 
 

;