புதுச்சேரி, ஆக. 17- புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது. 1,088 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 8,029ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4 உயிரிழந்ததையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.