புதுச்சேரியில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் உலந்தைகீர பாளையத்தில் நின்றிருந்த காரில் ஏசியை ஆன் செய்து விட்டு காரில் அமர்ந்திருந்தார் ஓட்டுநர் முத்துகுமரன். அப்போது எதிர்பாராத விதமாக கார் பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த முத்துக்குமரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.