tamilnadu

img

புதுச்சேரி சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி

சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று தியாகிகளை கவுரவித்தார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் வினய்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், தியாகிகள்  கலந்து கொண்டனர்.