tamilnadu

img

பள்ளியில் காய்கறி  மூலிகை கண்காட்சி

 அறந்தாங்கி, ஜூலை 21- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்என்புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் செலக்சன் கல்வி குழுமம் இணைந்து மாண வர்களின் செயல்திறன் மேம்பட பழங்கள், காய்கறிகள் மூலிகை கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் க.சுரேஷ்குமார் தலைமை வகித்தார் ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன் முன்னிலை வகித்தார் முன்னாள் தலைவர் பீர் சேக் செயலாளர் வீரையா வீரமாகாளியப்பன், செல்ல செந்தமிழ்செல்வன், குயின்டன், கராத்தே பிரதர் சோஷி யல் சர்வீஸ் தலைவர் சுப்பிரமணியன், ரெங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக பள்ளி துணை முதல்வர் மெரைன் வரவேற்றார் நிறைவாக கங்கா நன்றி கூறினார்.