tamilnadu

புதுக்கோட்டை,. தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

புத்தக அன்பளிப்புத் திட்டம்
அறந்தாங்கி, செப்.11- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு அரசு பள்ளி நூலகங்க ளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கும் திசைகள் நூலக புத்தக அன்பளிப்புத் திட்டத்தின் 5 வது நிகழ்வு மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்க ளன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ரெத்தினமூர்த்தி தலைமை வகித்தார். அறந்தாங்கி வட்டார வள மேற் பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தார். திசை கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேது.புகழேந்தி வர வேற்புரை ஆற்றினார். திட்ட இயக்குநர் யாஸ்மின் ராணி திட்ட விளக்க உரையாற்றினார். திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி புத்தகங்களின் முக்கி யத்துவம் குறித்து அறிமுக உரை ஆற்றினார். முதுநிலை ஆயுஷ் படிப்பு நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற சித்த மருத்துவர் டாக்டர் பொன்மணி கலந்து கொண்டார்.  விழாவில் பள்ளி நூலகத்திற்கு 100 புத்தகங்கள் அன்ப ளிப்பாக வழங்கப்பட்டன. விழாவில் ஆசிரியர்கள், திசை கள் அமைப்பு உறுப்பினர்கள், புத்தக கொடையாளர்கள் கலந்து கொண்டனர். திசைகள் அமைப்பின் பொருளா ளர் முகமது முபாரக் நிறைவாக நன்றி கூறினார்.

கிராம உதவியாளர் பணியிடம் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு 
தஞ்சாவூர், செப்.11-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகாவில் வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணி யிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாளாக செப்.10 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்.17 ஆம் தேதி வரை காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலட்சுமி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “பேராவூரணி தாலு காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமத்திற்கு 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதன்படி காலிப்பணி யிடங்களுக்கு பேராவூரணி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் மட்டும் இன சுழற்சி அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முதுநிலை வரிசையின் படி நியமனம் செய்யும் பொருட்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரும் செப்.17 முடிய காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பம் உள்ளவர்கள் பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் விண்ணப்பித்து கொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறது.  கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ள மனுதாரர்கள் பேராவூரணி தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்”. இவ்வாறு தெரிவித்துள்ளார்.