tamilnadu

சீனாவில் தவிக்கும் பொன்னமராவதி இளைஞர்

   பொன்னமராவதி, ஜன.28- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆஸ்பத்திரி ரோட்டில் வசிக்கும் சின்னையா மகன் ஸ்ரீபன் (வயது 33). இவர் கடந்த இரண்டு வாரங்க ளுக்கு முன்பு தான் சீனாவில் உள்ள யுவான் பல்கலைக் கழகத்தில் நானோ டெக்னா லஜி ஆராய்ச்சிக் கல்வி பயில சென்றுள்ளார். சீனாவில் கொரானோ வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் அவர் தனது பெற்றோருக்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில், வீட்டிற்கு வெளியே செல்ல அனும திக்கப்படவில்லை. அரிசி பால் மட்டுமே கொடுத்தார் கள்.  தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் மரண வேதனையாக இருக்கிறது. என்னுடன் தங்கியுள்ள தமிழக மாணவர்களையும் யுவான் பல்கலைக்கழக விடுதியிலிருந்து தமிழகம் அழைத்துச் செல்ல மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

;