tamilnadu

img

அத்துமீறிய பஜ்ரங்தள் அமைப்பினருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!

புதுக்கோட்டை அருகே லாரியை மடக்கி அத்துமீறலில் ஈடுபட்ட பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த 4 பேரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே இறைச்சிக்காக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்து அத்துமீறலில் ஈடுபட்டதற்காக பஜ்ரங்தள் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மோகன்ராஜ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.