தஞ்சையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் திரைப்படக்கலைஞர் ரோகிணி துவக்கி வைத்தார்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் சார்பில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் ஜூன் 25 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கொண்டு வந்தது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை மீதான கருத்து கூற ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதிய கல்விக்கெள்கைக்கு எதிராக தமிழகத்தில் 1கோடி பேரிடம் கையெழுத்து பெறும் போராட்டத்தை கடந்த 25ம் தேதி துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் கல்லூரியில் திரைப்படக்கலைஞர் ரோகிணி புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான கையெழுத்து பெறும் நிகழ்வில் பங்கேற்றார். இதில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று மோடி அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை கையெழுத்தாக பதிவு செய்தனர்.