சென்னை, டிச. 4- தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை 20 ஆம் தேதிக்குப் பிறகு வழங்க முடிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ கத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்க ளுக்குப் பச்சரிசி, சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்கப்பணம் 1,000 ரூபாய் வழங்கப்படு கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் சென்னையில் பொங்கல் பரிசு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இது வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இதற்காக 2.05கோடி குடும்ப அட்டை தாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு உணவு மற்றும் கூட்டுற வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்புக்குத் தேவை யான அனைத்து பொருட்களையும் ஒருவார காலத்திற்குள் கொள்முதல் செய்து தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது பற்றி பதிவாளர் சொன்ன பிறகே பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்க ளின் பதிவாளர் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவை யான அனைத்து பொருட்களையும் ஒரு வாரத்திற்குள் கொள்முதல் செய்து தகுதி யுள்ள அட்டை தாரர்களுக்கு வழங்கத் தயார் நிலையில் வைக்க வேண்டும். பதிவாளரின் அறிவுரை பெற்ற பிறகு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி உணவுத்துறை அமைச்சர் காம ராஜ் கூறுகையில், ‘பொங்கல் பரிசு தொகுப்பு இன்னும் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படவில்லை. அனைத்து பொருட் களையும் கொள்முதல் செய்த பிறகே எப்போது வழங்குவது என்று முடிவு செய் யப்படும். எனவே பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பதை இப்போது சொல்ல இயலாது’ என்றார். இதுபற்றி உயர் அதிகாரிகள் கூறிய தாவது:- பொங்கல் பரிசு தொகுப்பு 2.05 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டி இருப்பதால் இதற்குப் பொருட் களைக் கொள்முதல் செய்யக் கால அவகா சம் தேவைப்படுகிறது. அவைகளை மொத்த மாக வாங்கி அதன்பிறகு பொட்டலம் போட வேண்டும்.
பச்சரிசி, சர்க்கரையை நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யும். முந்திரி, திராட்சை மற்றும் ஏலக் காயைச் செலவு உள்பட ரூ.40-க்கும், கரும்பு ரூ.15 என்றும் விலை நிர்ணயித்து நியாயவிலைக் கடைகளை நடத்தும் கூட்டுற வுச் சங்கங்களே வாங்கக் கூட்டுறவுத் துறை அனுமதி அளித்துள்ளது. கரும்பு சில இடங்களில் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இவை எல்லாம் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு தான் எந்த தேதியில் பொது மக்களுக்குக் கொடுப்பது என்பது முடிவு செய்யப்படும். ஒரே நாளில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கொடுத்துவிட முடியாது. தெரு வாரியாக குடும்ப அட்டைகள் பிரிக்கப் பட்டு கூட்டநெரிசல் இல்லாமல் பொதுமக்க ளுக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்து வரு கிறது.
நியாயவிலைக் கடைகளில் கூடுத லாக ஊழியர்களை நியமித்து பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அநேகமாக வருகிற 20 ஆம் தேதிக்குப் பிறகு பொங்கல் தொகுப்பு பரிசு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கு வது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதுகுறித்து முறையான அறிவிப்பு அந்தந்த நியாயவிலைக்கடைகளிலிருந்து வெளியிடப்படும். நியாயவிலைக்கடையின் அறிவிப்புப் பலகையிலும் எப்போது பொங்கல் பணம் வழங்கப்படும் என்ற விவ ரம் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படும். எனவே அரிசி அட்டைதாரர்கள் அனைவ ருக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும். எனவே யாரும் கூட்ட நெரிசலைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்துள்ள தால் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு எந்த தடையும் இருக்காது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையரின் அனுமதியைப் பெற்று அதன் பிறகே பொங்கல் பரிசு தொகுப்பை முறைப்படி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.