கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 22 ஆம் முதல் மக்கள் வீடுகளில் முடங்கி யுள்ளனர். மக்களுக்கு வேலை யில்லை, வருமானமில்லை, கையில் பணமுமில்லை. இதனால் உயிர் வாழ வழி தெரியாமல், கோர பசியுடன், பட்டினியுடனும் தின கூலிகள் உள்ளனர். உறவுகளின் ஆதரவையும் தொலைத்த சுமார் 10 கோடி புலம் பெயர்ந்த தொழிலா ளர்கள் தேசம் முழுவதும் பரவிகிடக்கிறார்கள்.
இவர்களின் பசியை போக்க அரிசியும், கோது மையும் தரவேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. வாரி வழங்க மத்திய உணவு கழ கத்தின் கிடங்குகளில் கையிருப்பும் உள்ளது. ஏறக்குறைய 31 மில்லியன் டன் அரிசியும், 28 மில்லியன் டன் கோதுமையும் புழங்கி கிடக்கிறது. இதை எடுத்து பசியால் தவிக்கும் மக்களுக்கு தர சொன்னால், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் தரமுடியாது என்றும், நாடு அவசர நிலையை எதிர்கொள்ளும் போதுதான் தரமுடியும் என கூறுகின்றனர்.
இதை விட வேறு ஒரு அவசர நிலை எப்போது சந்திக்க நேரிடும் என தெரியவில்லை. இப்படி கூறிய இவர்கள் தான் அதே அரிசி மற்றும் கோது மையை பயன்படுத்தி எத்தனால் என்கிற எரி பொருளை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள னர். கேட்டால் சானிடைசர்களை (கைகழுவ பயன்ப டுத்தும் திரவ பொருள் ) தயாரிக்க எத்தனால் தேவைபடுகிறது என கூச்சலிடுகிறார்கள். சானி டைசர்களை தயாரிக்க கூடாது என நாம் கூற வில்லை. கோடிக்கணக் கான பாட்டில்களை தயாரிக்கட்டும். எவருக்கும் ஆட்சே பனையில்லை. அதற்கு தேவையான எத்தனால் என்ற மூல பொருள் நம்மிடம் ஏற்கனவே 500 மில்லியன் லிட்டர் கையிருப்பு உள்ளது.
மேலும் இந்தியாவில் உள்ள சர்க்கரை ஆலைகளிலிருந்து சர்க்க ரைக்கு அடுத்த படியாக உற்பத்தியா கும் எத்தனால், வருடம் ஒன்றுக்கு சுமார் 3000 மில்லியன் லிட்டர் தயாரா கிறது. இதில் 70 சதவீத எத்தனாலை மட்டும் பயன்படுத்தினாலே 700 மில்லியன் லிட்டர் சானிடைசர்களை தயாரிக்கலாம்.
மேலும் கடந்த 40 நாட்களாக நாட்டிலுள்ள அணைத்து மது உற்பத்தி ஆலைகள் மூடியே கிடக்கின்றன. ஆகவே அந்த ஆலைகள் பயன்ப டுத்தாததால் அந்த எத்தனாலும் கையிருப்பு கூடுத லாகவே இருக்கும். அதையும் பயன்படுத்தினால் பல கோடி லிட்டர் தயாரிக்கலாம். இவை அனைத்தையும் மீறி ஆட்சியாளர்கள் நமக்கான அரிசி மற்றும் கோதுமையை பயன்படுத்தி எத்த னால் தயாரிக்கும் மர்மம் என்ன? தயாரித்து, தயார் நிலையில் வைத்து, ரிசர்வ் வங்கியிலிருந்து எடுத்து ரூ. 1,75,000 கோடி ஒரு முறையும், கடன் தள்ளுபடி என்ற பெயரில் ரூ.68,000 கோடி இம்முறை யும் பெரு முதலாளிகளுக்கு தாரைவார்த்ததை போல், எங்கள் வாயடைத்து தயாரிக்கும் எத்த னாலை சாராய உற்பத்தி முதலாளிகளுக்கு வாரி வழங்க தயாராகி கொன்டிருப்பது தவிர வேறென்ன?.
-பி.துளசிநாராயணன்,
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்