புதுதில்லி:
வெங்காயம், உருளைக் கிழங்குவிலை உயர்வைத் தொடர்ந்து, சமையல் எண்ணெய் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன.சூரியகாந்தி, கடுகு எண்ணெய், சோயா மற்றும் பாமாயில் என அனைத்து சமையல் எண்ணெய் வகைகளும், கடந்த 6 மாதங்களில் 33 முதல் 53 சதவிகிதம் வரை விலை அதிகரித்துள்ளன.கடுகு, சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விலைஇந்தியாவில் தற்போது மிகவும் உச்சத்தை எட்டியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிக விலைகொடுத்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதால், எதிர்வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளது என்று எண்ணெய் வித்து சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு ஃப்யூச்சர்ஸ் சந்தையில் கச்சா பாமாயில் (CPO) விலைகடந்த 6 மாதங்களில் மட்டும் 53 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. சோயாபீன் மற்றும் கடுகு எண் ணெய் விலைகளும் உயர்ந்து வருகின்றன.நாட்டின் விவசாய பொருட்களுக்கான மிகப்பெரிய ஃப்யூச்சர்ஸ் சந்தையான தேசிய பொருட்கள் மற்றும் டெரிவேடின்ஸ் பரிமாற்றத்தில் (NCDX), கடந்த வியாழக்கிழமையன்று கடுகு ஒப்பந்த விலைகுவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரத்து 348 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், NCDX-ல் சோயாபீனின் ஒப்பந்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரத்து 339 உயர்ந்தது.
சந்தை நிலவரப்படி, நாட்டில் கடுகின் மொத்த விலை வியாழக்கிழமையன்று 10 கிலோவுக்கு ரூ. ஆயிரத்து 155 ஆகவும், சோயா எண்ணெய்யின் மொத்த விலை 10 கிலோவுக்கு ரூ. 995 முதல் 1010 ஆகவும், பாமாயில் (ஆர்.பி.டி.)ரூ. 10 கிலோவுக்கு ரூ. 935 முதல் 945 ஆகவும் உயர்ந்துள்ளன. சூரியகாந்தி எண்ணெய் 10 கிலோவுக்கானமொத்த விலை ஆயிரத்து 180 முதல்ஆயிரத்து 220 ரூபாயைத் தொட் டுள்ளது.மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) கச்சா பாமாயிலின் விலை,வியாழக்கிழமையன்று சுமார் 2 சதவிகிதம் உயர்ந்து 10 கிலோவுக்கு 869 ரூபாய் 70 காசுகளாக அதிகரித்துள்ளது.
*****************
எண்ணெய் விலை உயர்வு ஒருபுறமிருக்க, இந்தியாவில் விற்கப்படும் வெங்காயம், உருளைக்கிழக்கு போன்ற உணவுப் பொருட் களின்விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த விலை உயர்வானது, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் அதிகம் என்ற ஒப்பீடுவெளியாகியுள்ளது.இந்தியாவில் உருளைக்கிழங்கு கிலோ 40-இல் துவங்கி 50 ரூபாய் என்றவிலைக்கு விற்கப்படுகிறது, புதிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாய்முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேபோல, வெங்காயம் கிலோ ஒன் றுக்கு 70 முதல் 80 ரூபாய் வரையும், தக்காளி கிலோ ஒன்றுக்கு 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் நாட்டின், பஞ்சாப் மாகாண வேளாண் இயக்குநரக தரவுகளின் படி, அந்நாட்டில் ஒரு கிலோ உருளைக் கிழங்கு (இந்திய நாணய மதிப்பில்) வெறும் 17 ரூபாய் 25 காசுகளுக்கு விற்கப்படுகிறது. புதிய உருளைக்கிழங்கை எடுத்துக் கொண்டாலும், 34 ரூபாய் 50 காசுகள் என்ற விலைக்கே விற்கப்படுகிறது.அதேபோல, ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 30 ரூபாய் 25 காசுகளாகவும், தக்காளியின் விலை 58 ரூபாய்25 காசுகளாகவும் உள்ளது.நேபாளத்தை எடுத்துக் கொண்டாலும், இந்திய ரூபாய் ரூபாய் மதிப்பில் அங்கு ஒரு கிலோ உருளைக் கிழங்கு, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் கிலோ 65 ரூபாய்க்கும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் சற்று அதிகமாக 75 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தக்காளி கிலோ 40 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.இவ்வளவுக்கும் நேபாளம், இந்தியாவிலிருந்துதான் உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.