tamilnadu

img

பேரா. தொ.பரமசிவன் உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி...

பண்பாட்டு ஆய்வாளரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவருமான தொ.பரமசிவன் (70) வியாழக்கிழமை காலமானார். நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் க.ஸ்ரீராம், எம்.சுடலைராஜ், ராஜகுரு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.பழனி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க நிர்வாகி இரா. நாறும்பூ நாதன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

;